பாடல் 793 - திருவிடைக்கழி - திருப்புகழ்

ராகம் -...;
தாளம் -
தனத்தனதத் தனத்தனதத் தனத்தனதத் தனத்தனதத் தனத்தனதத் தனத்தனதத் ...... தனதான |
இரக்குமவர்க் கிரக்கமிகுத் தளிப்பனசொப் பனத்திலுமற் றெனக்கியலுக் கிசைக்கெதிரெப் ...... புலவோரென் றெடுத்துமுடித் தடக்கைமுடித் திரட்டையுடுத் திலச்சினையிட் டடைப்பையிடப் ப்ரபுத்துவமுற் ...... றியல்மாதர் குரக்குமுகத் தினைக்குழலைப் பனிப்பிறையொப் பெனப்புயலொப் பெனக்குறுகிக் கலைக்குள்மறைத் ...... திடுமானின் குளப்படியிற் சளப்படுமிப் பவக்கடலைக் கடக்கஇனிக் குறித்திருபொற் கழற்புணையைத் ...... தருவாயே அரக்கரடற் கடக்கஅமர்க் களத்தடையப் புடைத்துலகுக் கலக்கணறக் குலக்கிரிபொட் ...... டெழவாரி அனைத்தும்வறப் புறச்சுரர்கற் பகப்புரியிற் புகக்கமலத் தனைச்சிறையிட் டிடைக்கழியிற் ...... பயில்வோனே கரக்கரடக் களிற்றுமருப் புலக்கையினிற் கொழித்தமணிக் கழைத்தரளத் தினைத்தினையிற் ...... குறுவாளைக் கணிக்குறவக் குறிச்சியினிற் சிலைக்குறவர்க் கிலச்சைவரக் கயத்தொடுகைப் பிடித்தமணப் ...... பெருமாளே. |
* திருவிடைக்கழி மாயூரத்திற்கு (மயிலாடுதுறைக்கு) 17 மைல் தென்கிழக்கே திருக்கடையூருக்கு அருகில் உள்ளது.இங்கு முருகன் குராமரத்தடியில் கொலு வீற்றிருக்கிறான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 793 - திருவிடைக்கழி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தனதத், என்னும், யானையின், ஒப்பென்றும், பெரிய, பெருமாளே, கொண்டு