பாடல் 768 - சீகாழி - திருப்புகழ்

ராகம் - ...; தாளம் -
தத்தா தத்தா தத்தா தத்தா தத்தா தத்தத் ...... தனதான |
கட்கா மக்ரோ தத்தே கட்சீ மிழ்த்தோர் கட்குக் ...... கவிபாடிக் கச்சா பிச்சா கத்தா வித்தா ரத்தே யக்கொட் ...... களைநீளக் கொட்கா லக்கோ லக்ஆகா ணத்தே யிட்டா சைப்பட் ...... டிடவேவை கொட்டா னக்கூ னுக்கா எய்த்தே னித்தீ தத்தைக் ...... களைவாயே வெட்கா மற்பாய் சுற்றூ மர்ச்சேர் விக்கா னத்தைத் ...... தரிமாறன் வெப்பா றப்பா டிக்கா ழிக்கே புக்காய் வெற்பிற் ...... குறமானை முட்கா னிற்கால் வைத்தோ டிப்போய் முற்சார் செச்சைப் ...... புயவீரா முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் ...... பெருமாளே. |
கள் குடிப்பதிலும், காம வசப்படுதலிலும், கோபப்படுவதிலும், இவைகளின் கண் வசப்பட்டவர்கள் மீது பாடல்களைப் பாடி, தெளிவில்லாத முறையில் பாடப் பட்டோர் பெருமையை பாமாலையில் நிலை நிறுத்தி, அப்படிப் பாடியதால் கொண்ட பொருள்களை நெடுநாளாகச் சேகரிக்கும் போது, அந்த அழகிய முக்கோணம் போன்ற பெண்குறிக்கே கொடுத்து ஆசைப்பட்டிடவே வைத்து (இங்ஙனம்) ஏற்கும் தானத்துக்காகவும், இந்த உடலுக்காகவும் தேடி இளைத்தேன். இந்தத் தீய குணத்தை நீக்கி அருள்வாயாக. வெட்கப்படாமல் ஆடையாக அரையில் பாயைச் சுற்றிக் கொள்ளும் அறிவிலிகளாகிய சமணர்களைச் சேர்ந்த தீதைக் கொண்டிருந்த பாண்டியனின் சுரம் தணியும்படி ('மந்திரமாவது நீறு' என்று தொடங்கும் பதிகத்தைப்) பாடி, சீகாழி என்னும் ஊரில் புகுந்து இருந்த திருஞான சம்பந்தனே, வள்ளி மலையில் குறப் பெண் வள்ளியை, முள் தைக்கும் காட்டில் காலை வைத்து ஓடிப்போய் முன்பு தினைப்புனத்திலே சென்று தழுவிய, வெட்சி மாலை அணிந்த தோள்களை உடைய வீரனே, முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான** அக்கினி வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே, முக்தி அளிக்கும் பெருமாளே.
என்று தொடங்கும் பாடல்கள்.
திருமுருகாற்றுப்படை.சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்.சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 768 - சீகாழி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தலம், பூஜித்த, தத்தா, என்னும், சீகாழி, மற்ற, முனிவர், சண்பை, தொடங்கும், முத்தா, பெருமாளே, பாடி, கொடுத்து, வைத்து