பாடல் 743 - திருநாவலூர் - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தானதன தத்த தானதன தத்த தானதன தத்த ...... தனதான |
கோல மறை யொத்த மாலைதனி லுற்ற கோரமதன் விட்ட ...... கணையாலே கோதிலத ருக்கள் மேவுபொழி லுற்ற கோகிலமி குத்த ...... குரலாலே ஆலமென விட்டு வீசுகலை பற்றி ஆரழலி றைக்கு ...... நிலவாலே ஆவிதளர் வுற்று வாடுமெனை நித்த மாசைகொட ணைக்க ...... வரவேணும் நாலுமறை கற்ற நான்முகனு தித்த நாரணனு மெச்சு ...... மருகோனே நாவலர்ம திக்க வேல்தனையெ டுத்து நாகமற விட்ட ...... மயில்வீரா சேலெனும் விழிச்சி வேடுவர் சிறுக்கி சீரணி தனத்தி ...... லணைவோனே சீதவயல் சுற்று நாவல்தனி லுற்ற தேவர்சிறை விட்ட ...... பெருமாளே. |
* திருநாவலூர் இப்போது திருநாமநல்லூர் என்று வழங்கப்படுகிறது. பண்ருட்டிக்கு 11 மைல் மேற்கே உள்ளது.இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவியாக தன்னைக் கற்பனை செய்து பாடியது.மன்மதன், மலர்க் கணைகள், சோலைக் குயில், நெருப்பை வீசும் நிலவு - வை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 743 - திருநாவலூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானதன, விட்ட, லுற்ற, தத்த, நெருப்பை, வீசும், கற்ற, பெருமாளே, மன்மதன்