பாடல் 69 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - ஜோன்புரி;
தாளம் - ஆதி - எடுப்பு 3/4 இடம்
தானன தானன தானன தந்தத் தானன தானன தானன தந்தத் தானன தானன தானன தந்தத் ...... தனதான |
தோலொடு மூடிய கூரையை நம்பிப் பாவையர் தோதக லீலைநி ரம்பிச் சூழ்பொருள் தேடிட வோடிவ ருந்திப் ...... புதிதான தூதொடு நான்மணி மாலைப்ர பந்தக் கோவையு லாமடல் கூறிய ழுந்தித் தோமுறு காளையர் வாசல்தொ றும்புக் ...... கலமாருங் காலனை வீணனை நீதிகெ டும்பொய்க் கோளனை மானமி லாவழி நெஞ்சக் காதக லோபவ்ரு தாவனை நிந்தைப் ...... புலையேனைக் காரண காரிய லோகப்ர பஞ்சச் சோகமெ லாமற வாழ்வுற நம்பிற் காசறு வாரிமெய்ஞ் ஞானத வஞ்சற் ...... றருளாதோ பாலன மீதும னான்முக செம்பொற் பாலனை மோதப ராதன பண்டப் பாரிய மாருதி தோள்மிசை கொண்டுற் ...... றமராடிப் பாவியி ராவண னார்தலை சிந்திச் சீரிய வீடணர் வாழ்வுற மன்றற் பாவையர் தோள்புணர் மாதுலர் சிந்தைக் ...... கினியோனே சீலமு லாவிய நாரதர் வந்துற் றீதவள் வாழ்புன மாமென முந்தித் தேமொழி பாளித கோமள இன்பக் ...... கிரிதோய்வாய் சேலொடு வாளைவ ரால்கள்கி ளம்பித் தாறுகொள் பூகம ளாவிய இன்பச் சீரலை வாய்நகர் மேவிய கந்தப் ...... பெருமாளே. |
* இங்கு கூறியுள்ள நூல்கள் தமிழ்ச் சிற்றிலக்கியங்களின் 96 வகைகளில் சில.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 69 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, தந்தத், கொண்டவனை, நிறைந்த, முன்பு, செய்து, கொண்டு, வீற்றிருந்து, கந்தப், பாவையர், வீணனை, காரண, வாழ்வுற, பெருமாளே