பாடல் 682 - வடதிருமுல்லைவாயில் - திருப்புகழ்

ராகம் -
மோஹனம் ; தாளம் - அங்கதாளம் - 6 1/2
- எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி
தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமி-2
- எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி
தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமி-2
தனதய்ய தானன தானன தனதய்ய தானன தானன தனதய்ய தானன தானன ...... தனதான |
அணிசெவ்வி யார்திரை சூழ்புவி தனநிவ்வி யேகரை யேறிட அறிவில்லி யாமடி யேனிட ...... ரதுதீர அருள்வல்லை யோநெடு நாளின மிருளில்லி லேயிடு மோவுன தருளில்லை யோஇன மானவை ...... யறியேனே குணவில்ல தாமக மேரினை யணிசெல்வி யாயரு ணாசல குருவல்ல மாதவ மேபெறு ...... குணசாத குடிலில்ல மேதரு நாளெது மொழிநல்ல யோகவ ரேபணி குணவல்ல வாசிவ னேசிவ ...... குருநாதா பணிகொள்ளி மாகண பூதமொ டமர்கள்ளி கானக நாடக பரமெல்லி யார்பர மேசுரி ...... தருகோவே படரல்லி மாமலர் பாணம துடைவில்லி மாமத னாரனை பரிசெல்வி யார்மரு காசுர ...... முருகேசா மணமொல்லை யாகி நகாகன தனவல்லி மோகன மோடமர் மகிழ்தில்லை மாநட மாடின ...... ரருள்பாலா மருமல்லி மாவன நீடிய பொழில் மெல்லி காவன மாடமை வடமுல்லை வாயிலின் மேவிய ...... பெருமாளே. |
* சிவபிரான் இடது கரத்தில் மேருவை வில்லாகத் தாங்கினார். அது தேவியின் கை.
** வடதிருமுல்லைவாயில் சென்னை அருகில் ஆவடிக்கு வடகிழக்கில் 3 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 682 - வடதிருமுல்லைவாயில் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, தனதய்ய, பார்வதிதேவி, பெருமை, சிவபிரான், நடனம், வாய்ந்த, கூடிய, பெருமாளே, சூழ்ந்த, அழகிய, தகதிமி, பெரிய