பாடல் 681 - திருவேற்காடு - திருப்புகழ்

ராகம் -
ஸிம்மேந்திர மத்யமம்
தாளம் - திஸ்ர த்ருபுடை
தாளம் - திஸ்ர த்ருபுடை
தாத்தாதன தானன தானன தாத்தாதன தானன தானன தாத்தாதன தானன தானன ...... தனதான |
கார்ச்சார்குழ லார்விழி யாரயி லார்ப்பால்மொழி யாரிடை நூலெழு வார்ச்சாரிள நீர்முலை மாதர்கள் ...... மயலாலே காழ்க்காதல தாமன மேமிக வார்க்காமுக னாயுறு சாதக மாப்பாதக னாமடி யேனைநி ...... னருளாலே பார்ப்பாயலை யோவடி யாரொடு சேர்ப்பாயலை யோவுன தாரருள் கூர்ப்பாயலை யோவுமை யாள்தரு ...... குமரேசா பார்ப்பாவல ரோதுசொ லால்முது நீர்ப்பாரினில் மீறிய கீரரை யார்ப்பாயுன தாமரு ளாலொர்சொ ...... லருள்வாயே வார்ப்பேரரு ளேபொழி காரண நேர்ப்பாவச காரண மாமத ஏற்பாடிக ளேயழி வேயுற ...... அறைகோப வாக்காசிவ மாமத மேமிக வூக்காதிப யோகம தேயுறு மாத்தாசிவ பாலகு காவடி ...... யர்கள்வாழ்வே வேற்காடவல் வேடர்கள் மாமக ளார்க்கார்வநன் மாமகி ணாதிரு வேற்காடுறை வேதபு ¡£சுரர் ...... தருசேயே வேட்டார்மக வான்மக ளானவ ளேட்டார்திரு மாமண வாபொனி னாட்டார்பெரு வாழ்வென வேவரு ...... பெருமாளே. |
மேகத்தை ஒத்த கூந்தலை உடையவர்கள், கூரிய வேல் போன்ற கண்களை உடையவர்கள், பால் போல் இனிய சொற்களை உடையவர்கள், இடையானது நூல் போல நுண்ணிதாக உடையவர்கள் பொருந்திய இள நீரைப் போன்ற மார்பகங்களை உடையவர்களாகிய விலைமாதர்கள் மீதுள்ள மயக்கத்தாலே, திண்ணியதான அன்பு பூண்டுள்ள மனமே, மிக்க காமப் பித்தனாக இருக்கின்ற ஜாதகத்தை உடையவனும், மிகவும் பெரிய பாதகச் செயல்களைப் புரிபவனுமாகிய அடியேனை, உன்னுடைய திருவருள் கொண்டு பார்க்க மாட்டாயோ? உனது அடியார்களோடு சேர்க்க மாட்டாயோ? உன்னுடைய பூரண அருளை நிரம்பத் தர மாட்டாயோ? உமா தேவி பெற்ற குமரேசனே, பூமியில் உள்ள புலவர்கள் ஓதும் புகழ்ச் சொற்களால் பழைய கடல் சூழ்ந்த இவ்வுலகில் மேம்பட்டு விளங்குபவராகிய நக்கீரரை* மகிழ்ந்து ஏற்பவனே, உனது திருவருளை அதேபோலப் பாலித்து ஒப்பற்ற ஒரு உபதேசச் சொல்லை எனக்கு அருளுவாயாக. (உலகத்துக்கு) நீடிய பேர் அருளையே பொழிந்த மூல காரணனே, நேரிட்டு எதிர்த்த பாவத்துக்குத் துணைக் காரணமாகிய சமண மதத்தை ஏற்பாடு செய்த மதக் குருக்கள் அழிபட (தேவாரப் பாடல்களை திருஞானசம்பந்தராக வந்து) கூறிய, கோபம் கொண்ட திருவாக்கை உடையவனே, சிறந்த சிவ மதமே பெருகும்படி முயற்சிகளைச் செய்த தலைவனே, யோக நிலையில் இருக்கும் பெரியவனே, சிவனது குமரனே, குகனே அடியார்களின் செல்வமே, வேல் ஏந்திக் காட்டில் வசிக்கும் வேடர்களின் சிறந்த பெண்ணாகிய வள்ளியிடம் அன்பு பூண்ட நல்ல அழகிய கணவனே, திருவேற்காட்டில்** வீற்றிருக்கும் வேத பு¡£சுரர் பெற்ற குழந்தையே, வேள்வி நிரம்பிய யாகபதியாகிய இந்திரனுடைய மகளான தேவயானையின் சிறந்த அழகிய மணவாளனே, பொன்னுலகத்தினரான தேவர்களுடைய செல்வம் என வருகின்ற பெருமாளே.
* சிவபிரானால் சபிக்கப்பட்டு சிறையில் இருந்த நக்கீரர், திருமுருகாற்றுப்படையைப் பாடி முருகன் அருளால் சிறை மீண்டார்.
** திருவேற்காடு சென்னையின் அருகிலுள்ள ஆவடி ரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கில் 4 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 681 - திருவேற்காடு - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, உடையவர்கள், மாட்டாயோ, சிறந்த, தாத்தாதன, உனது, செய்த, அழகிய, பெற்ற, வேல், காரண, மேமிக, மாமத, பெருமாளே, அன்பு, உன்னுடைய