பாடல் 671 - விரிஞ்சிபுரம் - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - ..........
தனன தனதனத் தனன தனதனத் தனன தனதனத் தனன தனதனத் தனன தனதனத் தனன தனதனத் ...... தனதானா |
பரவி யுனதுபொற் கரமு முகமுமுத் தணியு முரமுமெய்ப் ப்ரபையு மருமலர்ப் பதமும் விரவுகுக் குடமு மயிலுமுட் ...... பரிவாலே படிய மனதில்வைத் துறுதி சிவமிகுத் தெவரு மகிழ்வுறத் தரும நெறியின்மெய்ப் பசியில் வருமவர்க் கசன மொருபிடிப் ...... படையாதே சருவி யினியநட் புறவு சொலிமுதற் பழகு மவரெனப் பதறி யருகினிற் சரச விதமளித் துரிய பொருள்பறித் ...... திடுமானார் தமது ம்ருகமதக் களப புளகிதச் சயில நிகர்தனத் திணையின் மகிழ்வுறத் தழுவி யவசமுற் றுருகி மருளெனத் ...... திரிவேனோ கரிய நிறமுடைக் கொடிய அசுரரைக் கெருவ மதமொழித் துடல்கள் துணிபடக் கழுகு பசிகெடக் கடுகி அயில்விடுத் ...... திடுதீரா கமல அயனுமச் சுதனும் வருணனக் கினியு நமனுமக் கரியு லுறையுமெய்க் கணனு மமரரத் தனையு நிலைபெறப் ...... புரிவோனே இரையு முததியிற் கடுவை மிடறமைத் துழுவை யதளுடுத் தரவு பணிதரித் திலகு பெறநடிப் பவர்மு னருளுமுத் ...... தமவேளே இசையு மருமறைப் பொருள்கள் தினமுரைத் தவனி தனிலெழிற் கரும முனிவருக் கினிய கரபுரப் பதியி லறுமுகப் ...... பெருமாளே. |
* கரபுரம் என்ற விரிஞ்சிபுரம் வேலூருக்கு மேற்கே காட்பாடியிலிருந்து 8 மைல் தொலைவில் உள்ளது. பிரமன் பூஜித்ததால் 'விரிஞ்சன்புரம்' ஆகி, 'விரிஞ்சிபுரம்' என்று பெயர் மருவிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 671 - விரிஞ்சிபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனத், பெற்று, நிறுத்தி, கொண்ட, அந்த, விரிஞ்சிபுரம், செய்யும், உள்ள, உடல், மகிழ்வுறத், படிய, தமது, தழுவி, திரிவேனோ, பெருமாளே