பாடல் 669 - விரிஞ்சிபுரம் - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தனதனன தான தனதனன தான தனதனன தான ...... தனதானா |
குலையமயி ரோதி குவியவிழி வீறு குருகினிசை பாடி ...... முகமீதே குறுவியர்வு லாவ அமுதினினி தான குதலையுமொ ராறு ...... படவேதான் பலவிதவி நோத முடனுபய பாத பரிபுரமு மாட ...... அணைமீதே பரிவுதரு மாசை விடமனமொ வாத பதகனையு மாள ...... நினைவாயே சிலைமலைய தான பரமர்தரு பால சிகிபரிய தான ...... குமரேசா திருமதுரை மேவு மமணர்குல மான திருடர்கழு வேற ...... வருவோனே கலின்வடிவ மான அகலிகைபெ ணான கமலபத மாயன் ...... மருகோனே கழனிநெடு வாளை கமுகொடிய மோது கரபுரியில் வீறு ...... பெருமாளே. |
* கரபுரம் என்ற திருவிரிஞ்சைத் தலம் (விரிஞ்சிபுரம்) வேலூருக்கு மேற்கே காட்பாடியிலிருந்து 8 மைல் தொலைவில் உள்ளது.பிரமன் பூஜித்ததால் விரிஞ்சன்புரம் ஆகி, விரிஞ்சிபுரம் என்று பெயர் மருவிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 669 - விரிஞ்சிபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, கொண்ட, உள்ள, விரிஞ்சிபுரம், மேல், பெருமாளே, வீறு, பாடி, வாளை