பாடல் 658 - வெள்ளிகரம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனதன தய்ய தனதன தய்ய தனதன தய்ய ...... தனதான |
குவலய மல்கு தவலிகள் முல்லை குளிர்நகை சொல்லு ...... முதுபாகு குழையிள வள்ளை யிடைசிறு வல்லி குயமுலை கொள்ளை ...... விழைமேவிக் கவலைசெய் வல்ல தவலரு முள்ள கலவியில் தெள்ளு ...... கவிமாலை கடிமல ரைய அணிவன செய்ய கழலிணை பைய ...... அருள்வாயே தவநெறி யுள்ளு சிவமுனி துள்ளு தனியுழை புள்ளி ...... யுடனாடித் தருபுன வள்ளி மலைமற வள்ளி தருதினை மெள்ள ...... நுகர்வோனே அவநெறி சொல்லு மவரவை கொல்லு மழகிய வெள்ளி ...... நகர்வாழ்வே அடையலர் செல்வ மளறிடை செல்ல அமர்செய வல்ல ...... பெருமாளே. |
உலகில் நிறைந்துள்ள, ஒழுக்கக் குறைபாடுகள் உள்ள விலைமாதர்களின் பற்கள் குளிர்ந்த முல்லை மலர் போன்றவை, பேச்சும் முதிர்ந்த வெல்லம் போன்றது, காது இளமையான வள்ளிக் கொடி போன்றது, இடுப்பு சிறிய கொடி ஒத்தது, இளமை வாய்ந்த மார்பகங்கள் பூரித்து உள்ளன (என்று எல்லாம் கூறி) விருப்பம் மிகவும் அடைந்து, மனக் கவலை தரத்தக்க குற்றம், குறை உள்ளவர்களுடன் நான் இணைந்திருந்த போதும், தெளிந்த கவி மாலைகளையும், நறு மணம் உள்ள மலர் மாலைகளையும் அழகுற அணிவிப்பதற்காக உனது திருவடி இணைகளை மெல்ல எனக்கு அருள் புரிவாயாக. முன்பு, தவ நெறியில் தியானித்து இருந்த சிவ முனிவரின் (தவத்தைக் கலைத்துத்) துள்ளிச் சென்ற, ஒப்பற்ற, புள்ளி மானுடன் கலந்து பெற்றெடுத்தவளும், தினைப்புனத்தில் இருந்தவளும், அந்த வள்ளி மலையில் இருந்த வேட்டுவ குலத்தைச் சேர்ந்தவளுமான வள்ளி கொடுத்த தினை மாவை மெதுவாக உண்டவனே, பயனற்ற மார்க்கத்தைச் சொல்லி வந்த சமணர்களின் கூட்டத்தை (கழுவில்) மாய்த்த (திருஞானசம்பந்தராக வந்து) அழகு வாய்ந்த வெள்ளிகரம்* என்னும் நகரில் வாழும் செல்வனே, பகைவர்களாகிய அசுரர்களின் செல்வம் எல்லாம் கடல் நீரில் மூழ்கி அழியும்படி சண்டை செய்ய வல்ல பெருமாளே.
* வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கே 22 மைலில் உள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்துக்கு மேற்கே 12 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 658 - வெள்ளிகரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வள்ளி, வல்ல, உள்ள, தனதன, தய்ய, வாய்ந்த, மாலைகளையும், மைலில், இருந்த, கொடி, எல்லாம், பெருமாளே, சொல்லு, முல்லை, செய்ய, புள்ளி, மலர், போன்றது