பாடல் 650 - திருக்கோணமலை - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனத்த தானன தனத்தான தானன தனத்த தானன தனத்தான தானன தனத்த தானன தனத்தான தானன ...... தனதான |
விலைக்கு மேனியி லணிக்கோவை மேகலை தரித்த வாடையு மணிப்பூணு மாகவெ மினுக்கு மாதர்க ளிடக்காம மூழ்கியெ ...... மயலூறி மிகுத்த காமிய னெனப்பாரு ளோரெதிர் நகைக்க வேயுட லெடுத்தேவி யாகுல வெறுப்ப தாகியெ யுழைத்தேவி டாய்படு ...... கொடியேனைக் கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை கவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசெயு ...... மொருவாழ்வே கதிக்கு நாதனி யுனைத்தேடி யேபுக ழுரைக்கு நாயெனை யருட்பார்வை யாகவெ கழற்கு ளாகவெ சிறப்பான தாயருள் ...... தரவேணும் மலைக்கு நாயக சிவக்காமி நாயகர் திருக்கு மாரனெ முகத்தாறு தேசிக வடிப்ப மாதொரு குறப்பாவை யாள்மகிழ் ...... தருவேளே வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர் அகத்ய மாமுநி யிடைக்காடர் கீரனும் வகுத்த பாவினில் பொருட்கோல மாய்வரு ...... முருகோனே நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர் திருக்கொ ணாமலை தலத்தாரு கோபுர நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் ...... வருவோனே நிகழ்த்து மேழ்பவ கடற்சூறை யாகவெ யெடுத்த வேல்கொடு பொடித்தூள தாஎறி நினைத்த காரிய மநுக்கூல மேபுரி ...... பெருமாளே. |
* திருக்கோணமலை இலங்கையில் உள்ளது. தட்சிண கயிலாயங்கள் மூன்று - திருக்காளத்தி, திருச்சிராப்பள்ளி, திருக்கோணமலை.கிளிப்பாடு பூதி என்பது திருக்கோணமலைக் கோயில் கோபுர நிலையில் உள்ள ஓரிடத்துக்குப் பெயர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 650 - திருக்கோணமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, கிளிப்பாடு, தனத்த, அருள், கோபுர, என்னும், தனத்தான, கொண்டு, திருக்கோணமலை, பூதி, அழகிய, சிறந்த, நினைத்த, கலக்க, மாகவெ, யாகவெ, முருகோனே, பெருமாளே, உடலில்