பாடல் 620 - பூம்பறை - திருப்புகழ்

ராகம் - ...; தாளம்
-
தாந்ததன தான தாந்ததன தான தாந்ததன தான ...... தனதான |
மாந்தளிர்கள் போல வேய்ந்தவுடல் மாதர் வாந்தவிய மாக ...... முறைபேசி வாஞ்சைபெரு மோக சாந்திதர நாடி வாழ்ந்தமனை தேடி ...... உறவாடி ஏந்துமுலை மீது சாந்துபல பூசி ஏங்குமிடை வாட ...... விளையாடி ஈங்கிசைகள் மேவ லாஞ்சனையி லாமல் ஏய்ந்தவிலைமாதர் ...... உறவாமோ பாந்தண்முடி மீது தாந்ததிமி தோதி தாஞ்செகண சேசெ ...... எனவோசை பாங்குபெறு தாள மேங்கநட மாடு பாண்டவர்ச காயன் ...... மருகோனே பூந்தளிர்கள் வீறு வேங்கைகள்ப லாசு பூங்கதலி கோடி ...... திகழ்சோலை பூந்தடமு லாவு கோம்பைகள்கு லாவு பூம்பறையின் மேவு ...... பெருமாளே. |
* கோம்பை - செந்நிறமான உயர் ஜாதி நாய்கள். மதுரை மாவட்டத்தில் உள்ளன. காவலுக்கு ஏற்றவை.
** பூம்பறை கொடைக்கானலுக்கு மேற்கே 12 மைலில் வராககிரி மீது உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 620 - பூம்பறை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மீது, மரங்களும், தாந்ததன, உறவு, நிற்கும், அழகிய, பெருமாளே, சேசெ, தேடி, உறவாடி, பூசி, தாளம், லாவு