பாடல் 589 - திருச்செங்கோடு - திருப்புகழ்

ராகம் -...;
தாளம் -
தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனத்தம் ...... தனதான |
இடம்பார்த் திடம்பார்த் திதங்கேட் டிரந்தேற் றிணங்காப் பசிப்பொங் ...... கனல்மூழ்கி இறுங்காற் கிறுங்கார்க் கிரும்பார்க் குநெஞ்சார்க் கிரங்கார்க் கியற்றண் ...... டமிழ்நூலின் உடம்பாட் டுடன்பாட் டியம்பாத் தயங்காத் துளங்காத் திடப்புன் ...... கவிபாடி ஒதுங்காப் பொதுங்காப் பதுங்காப் புகன்றேத் துறும்பாற் குணக்கன் ...... புறலாமோ கடந்தோற் கடந்தோற் றறிந்தாட் கருந்தாட் கணைந்தாட் கணித்திண் ...... புயமீவாய் கரும்போற் கரும்போர்க் குளங்காட் டிகண்டேத் துசெங்கோட் டில்நிற்குங் ...... கதிர்வேலா அடைந்தோர்க் குணந்தோர்க் களிந்தோர்க் கமைந்தோர்க் கவிழ்ந்தோர்க் குணற்கொன் ...... றிலதாகி அலைந்தோர்க் குலைந்தோர்க் கினைந்தோர்க் கலந்தோர்க் கறிந்தோர்க் களிக்கும் ...... பெருமாளே. |
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 589 - திருச்செங்கோடு - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனந்தாத், உள்ளம், மனம், திருச்செங்கோடு, இருப்பதால், என்றும், கொண்டவர்களுக்கும், நிலை, பார்த்து, பெருமாளே, கடந்தோற், இடம்