பாடல் 580 - விராலிமலை - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தானா தனான தனத்த தத்தன தானா தனான தனத்த தத்தன தானா தனான தனத்த தத்தன ...... தனதான |
மாயா சொரூப முழுச்ச மத்திகள் ஓயா வுபாய மனப்ப சப்பிகள் வாணா ளையீரும் விழிக்க டைச்சிகள் ...... முநிவோரும் மாலா கிவாட நகைத்து ருக்கிகள் ஏகா சமீது தனத்தி றப்பிகள் வா¡£ ரி¡£ரென் முழுப்பு ரட்டிகள் ...... வெகுமோகம் ஆயா தவாசை யெழுப்பு மெத்திகள் ஈயா தபோதி லறப்பி ணக்கிகள் ஆவே சநீருண் மதப்பொ றிச்சிகள் ...... பழிபாவம் ஆமா றெணாத திருட்டு மட்டைகள் கோமா ளமான குறிக்க ழுத்திகள் ஆசா ரவீன விலைத்த னத்திய ...... ருறவாமோ காயா தபால்நெய் தயிர்க்கு டத்தினை ஏயா வெணாம லெடுத்தி டைச்சிகள் காணா தவாறு குடிக்கு மப்பொழு ...... துரலோடே கார்போ லுமேனி தனைப்பி ணித்தொரு போர்போ லசோதை பிடித்த டித்திட காதோ டுகாது கையிற்பி டித்தழு ...... தினிதூதும் வேயா லநேக விதப்ப சுத்திரள் சாயா மல்மீள அழைக்கு மச்சுதன் வீறா னமாம னெனப்ப டைத்தருள் ...... வயலூரா வீணாள் கொடாத படைச்செ ருக்கினில் சூர்மா ளவேலை விடுக்கும் அற்புத வேலா விராலி மலைத்த லத்துறை ...... பெருமாளே. |
* விராலிமலை திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 580 - விராலிமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானா, தத்தன, தனத்த, தனான, உண்டு, உள்ள, என்னும், போது, வண்ணம், விராலி, டைச்சிகள், திருட்டு, அற்புத, பெருமாளே, உடையவர்கள்