பாடல் 58 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - .....
தந்ததன தானதன தத்தான தந்ததன தானதன தத்தான தந்ததன தானதன தத்தான ...... தனதான |
சந்தனச வாதுநிறை கற்பூர குங்குமப டீரவிரை கத்தூரி தண்புழுக ளாவுகள பச்சீத ...... வெகுவாச சண்பகக லாரவகு ளத்தாம வம்புதுகி லாரவயி ரக்கோவை தங்கியக டோரதர வித்தார ...... பரிதான மந்தரம தானதன மிக்காசை கொண்டுபொருள் தேடுமதி நிட்டூர வஞ்சகவி சாரஇத யப்பூவை ...... யனையார்கள் வந்தியிடு மாயவிர கப்பார்வை அம்பிலுளம் வாடுமறி வற்றேனை வந்தடிமை யாளஇனி யெப்போது ...... நினைவாயே இந்த்ரபுரி காவல்முதன் மைக்கார சம்ப்ரமம யூரதுர கக்கார என்றுமக லாதஇள மைக்கார ...... குறமாதின் இன்பஅநு போகசர சக்கார வந்தஅசு ரேசர்கல கக்கார எங்களுமை சேயெனரு மைக்கார ...... மிகுபாவின் செந்தமிழ்சொல் நாலுகவி தைக்கார குன்றெறியும் வேலின்வலி மைக்கார செஞ்சொலடி யார்களெளி மைக்கார ...... எழில்மேவும் திங்கள்முடி நாதர்சம யக்கார மந்த்ரவுப தேசமகி மைக்கார செந்தினகர் வாழுமரு மைத்தேவர் ...... பெருமாளே. |
* தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,மதுரம் - இனிமை வாய்ந்தது,சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,வித்தாரம் - வர்ணனை மிக்கது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 58 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மைக்கார, தானதன, கொண்டு, தத்தான, தந்ததன, கொண்டவனே, மிக்கது, வந்து, வாய்ந்தவனே, இருப்பவனே, உடையதாய், கக்கார, பெருமாளே, மணமுள்ள, கொண்ட, மனம்