பாடல் 57 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
- .....
தத்ததன தானதன தத்தான தத்ததன தானதன தத்தான தத்ததன தானதன தத்தான ...... தனதான |
சத்தமிகு மேழுகட லைத்தேனை யுற்றமது தோடுகணை யைப்போர்கொள் சத்திதனை மாவின்வடு வைக்காவி ...... தனைமீறு தக்கமணம் வீசுகம லப்பூவை மிக்கவிளை வானகடு வைச்சீறு தத்துகளும் வாளையடு மைப்பாவு ...... விழிமாதர் மத்தகிரி போலுமொளிர் வித்தார முத்துவட மேவுமெழில் மிக்கான வச்சிரகி ¡£டநிகர் செப்பான ...... தனமீதே வைத்தகொடி தானமயல் விட்டான பத்திசெய ஏழையடி மைக்காக வஜ்ரமயில் மீதிலினி யெப்போது ...... வருவாயே சித்ரவடி வேல்பனிரு கைக்கார பத்திபுரி வோர்கள்பனு வற்கார திக்கினுந டாவுபுர விக்கார ...... குறமாது சித்தஅநு ராககல விக்கார துட்டஅசு ரேசர்கல கக்கார சிட்டர்பரி பாலலளி தக்கார ...... அடியார்கள் முத்திபெற வேசொல்வச னக்கார தத்தைநிகர் தூயவநி தைக்கார முச்சகர்ப ராவுசர ணக்கார ...... இனிதான முத்தமிழை யாயும்வரி சைக்கார பச்சைமுகில் தாவுபுரி சைக்கார முத்துலவு வேலைநகர் முத்தேவர் ...... பெருமாளே. |
ஒலி மிக்க ஏழு கடலை, (தேன் ஈட்டும்) வண்டை, தேன் நிறைந்த மலரை, அம்பை, சண்டை செய்யும் சக்தி வேலை, மாவடுவை, கருங்குவளைப் பூவை மேம்பட்டனவாயும், தகுந்த நறு மணம் வீசும் தாமரைப் பூவை, மிக முதிர்ந்த விஷத்தை, சீறிக்கொண்டு நீரில் தாவிப் பாயும் வாளை மீனை ஒத்தனவாயும், கொல்லும் குணம் கொண்ட, மை தீட்டிய கண்களை உடைய விலைமாதர்களின் மதம் கொண்ட யானை போல விளங்கும், விரிவாக உள்ள முத்து மாலை அணிந்ததாய், அழகு மிகுந்த வைரக் கி¡£டத்துக்கு ஒப்பானதாய், சிமிழ் போன்ற மார்பகத்தின் மீது நான் வைத்துள்ள கொடிய மயக்கத்தை விட்டு, மிகுந்த பக்தி செய்யும்படி ஏழை அடி¨மாகிய எனக்காக உறுதியான மயிலில் ஏறி இனி நீ எப்போது வருவாய்? அழகிய கூரிய வேலை ஏந்திய பன்னிரண்டு திருக்கைகளை உடையவனே, பக்தி செய்பவர்களுடைய நூலில் விளங்குபவனே, திசை தோறும் செலுத்தப்படுகின்ற குதிரையாகிய (மயில்) வாகனனே, குறப் பெண்ணாகிய வள்ளி உள்ளன்போடு இணையும் இன்பம் கொண்டவனே, துஷ்டர்களான அசுரர்கள் தலைவரோடு போர் புரிபவனே, நல்லவர்களைக் காத்தளிக்கும் திருவிளையாடல்களைக் கொண்டவனே, அடியார்கள் முக்தி பெறும்படி உபதேசிக்கும் திருவார்த்தைகளை உடையவனே, கிளி போன்ற பரிசுத்தமான தேவயானைக்குக் கணவனே, மூவுலகத்தினரும் பரவிப் போற்றும் திருவடிகளை உடையவனே, இனிதான (இயல், இசை, நாடகம் என்னும்) முத்தமிழை ஆய்ந்த சிறப்பைக் கொண்டவனே, கரிய மேகங்கள் தாவிச் செல்லும் மதில்களைக் கொண்ட திருக்கோயிலை உடையவனே, முத்துக்கள் உலவுகின்ற கடல் சூழ்ந்த நகராகிய திருச்செந்தூரில் வாழ்பவனே, மும்மூர்த்திகளுக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 57 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உடையவனே, தத்ததன, தானதன, கொண்டவனே, தத்தான, கொண்ட, பூவை, பக்தி, வேலை, மிகுந்த, பெருமாளே, அடியார்கள், விக்கார, இனிதான, முத்தமிழை, சைக்கார, தேன்