பாடல் 578 - விராலிமலை - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தானாத்தன தான தனதன தானாத்தன தான தனதன தானாத்தன தான தனதன ...... தனதான |
காமாத்திர மாகி யிளைஞர்கள் வாழ்நாட்கொடு போகி யழகிய காதாட்டிய பார இருகுழை ...... யளவோடிக் கார்போற்றவ ழோதி நிழல்தனி லார்வாட்கடை யீடு கனகொடு காலேற்றுவை வேலின் முனைகடை ...... யமதூதர் ஏமாப்பற மோக வியல்செய்து நீலோற்பல ஆசில் மலருட னேராட்டவி நோத மிடும்விழி ...... மடவார்பால் ஏகாப்பழி பூணு மருளற நீதோற்றிமு னாளு மடிமையை யீடேற்றுத லாலுன் வலிமையை ...... மறவேனே சீமாட்டியு மாய திரிபுரை காலாக்கினி கோப பயிரவி சீலோத்தமி நீலி சுரதிரி ...... புவநேசை சீகார்த்திகை யாய அறுவகை மாதாக்கள்கு மார னெனவெகு சீராட்டொடு பேண வடதிசை ...... கயிலாசக் கோமாற்குப தேச முபநிட வேதார்த்தமெய்ஞ் ஞான நெறியருள் கோதாட்டிய ஸ்வாமி யெனவரு ...... மிளையோனே கோடாச்சிவ பூஜை பவுருஷ மாறாக்கொடை நாளு மருவிய கோனாட்டுவி ராலி மலையுறை ...... பெருமாளே. |
* கோனாடு என்பது எறும்பீசர் மலைக்கு மேற்கு, மதிற்கரைக்குக் கிழக்கு, காவிரிக்குத் தெற்கு, பிரான்மலைக்கு வடக்கு என்ற எல்லைக்கு உட்பட்டது. இங்குதான் விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 578 - விராலிமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானாத்தன, தனதன, முனை, வாய்ந்த, வீற்றிருக்கும், என்னும், சென்று, உள்ள, கண்களை, வேலின், திரிபுரை, அறுவகை, பெருமாளே, இருந்து