பாடல் 56 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - ......;
தாளம் - ......
தந்தனா தந்தனா தந்தனா தந்தனா தந்தனா ...... தந்ததான |
சங்கைதா னொன்றுதா னின்றியே நெஞ்சிலே சஞ்சலா ...... ரம்பமாயன் சந்தொடே குங்குமா லங்க்ருதா டம்பரா சம்ப்ரமா ...... நந்தமாயன் மங்கைமார் கொங்கைசே ரங்கமோ கங்களால் வம்பிலே ...... துன்புறாமே வண்குகா நின்சொரூ பம்ப்ரகா சங்கொடே வந்துநீ ...... யன்பிலாள்வாய் கங்கைசூ டும்பிரான் மைந்தனே அந்தனே கந்தனே ...... விஞ்சையூரா கம்பியா திந்த்ரலோ கங்கள்கா வென்றவா கண்டலே ...... சன்சொல்வீரா செங்கைவேல் வென்றிவேல் கொண்டுசூர் பொன்றவே சென்றுமோ ...... தும்ப்ரதாபா செங்கண்மால் பங்கஜா னன்தொழா நந்தவேள் செந்தில்வாழ் ...... தம்பிரானே. |
கொஞ்சமும் சந்தேகம் இல்லாமல், மனத்தில் சஞ்சலம் கொண்டுள்ள மாயையில் தொடக்கத்தில் இருந்தே அகப்பட்டவனும், சந்தனத்துடன், குங்குமம் இவைகளால் சிங்கார ஆடம்பரம் செய்துகொண்டு, பரபரப்பான களிப்பும், ஆனந்தமும் கொண்ட மாயையில் அகப்பட்டவனும் ஆகிய நான் விலைமாதர்களின் மார்பகம் முதலான அங்கங்களின் மேல் உள்ள மோகங்களால் வீணாகத் துன்பம் கொள்ளாமல், வள்ளல் தன்மை வாய்ந்த குகனே, உனது திருவுருவமான பேரொளியுடன் நீ வந்து அன்புடன் என்னை ஆண்டருளுக. கங்கையைத் தலையில் சூடியுள்ள பிரானாகிய சிவ பெருமானின் மகனே, அழகனே, கந்தப் பெருமானே, வித்தையில் சிறந்தவர் ஊர்களில் வாழ்பவனே, நாங்கள் நடுக்கம் கொள்ளாதவாறு எங்கள் பொன்னுலகைக் காத்தருள்க என்று முறையிட்ட அந்த (ஆகண்டலேசன் என்னும்) இந்திரன் புகழ்ந்த வீரனே, செங்கையில் உள்ள ஆயுதமாகிய வெற்றிவேல் கொண்டு சூரன் அழியவே, சென்று அவனைத் தாக்கிய கீர்த்தி உள்ளவனே, சிவந்த கண்களை உடைய திருமாலும், தாமரையில் வாழும் பிரமனும் தொழுகின்ற ஆனந்தமான முருக வேளே, திருச்செந்தூரில் வீற்றிருக்கும் தலைவனே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 56 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தனா, உள்ள, மாயையில், அகப்பட்டவனும்