பாடல் 566 - இரத்னகிரி - திருப்புகழ்

ராகம் - மோஹனம்;
தாளம் - சதுஸ்ர த்ருவம் - கண்டநடை - 35
- எடுப்பு /4/4/4 0
நடை - தகிட தக
- எடுப்பு /4/4/4 0
நடை - தகிட தக
தத்ததன தானதன தானதன தானதன தத்ததன தானதன தானதன தானதன தத்ததன தானதன தானதன தானதன ...... தனதான |
சுற்றகப டோடுபல சூதுவினை யானபல கற்றகள வோடுபழி காரர் கொலை காரர்சலி சுற்றவிழ லானபவி ஷோடுகடல் மூழ்கிவரு ...... துயர்மேவித் துக்கசமு சாரவலை மீனதென கூழில்விழு செத்தையென மூளுமொரு தீயில்மெழு கானவுடல் சுத்தமறி யாதபறி காயமதில் மேவிவரு ...... பொறியாலே சற்றுமதி யாதகலி காலன்வரு நேரமதில் தத்துஅறி யாமலொடி யாடிவரு சூதரைவர் சத்தபரி சானமண ரூபரச மானபொய்மை ...... விளையாடித் தக்கமட வார்மனையை நாடியவ ரோடுபல சித்துவிளை யாடுவினை சீசியிது நாறவுடல் தத்திமுடி வாகிவிடு வேனொமுடி யாதபத ...... மருள்வாயே தித்திமித தீதிமித தீதிமித தீமிதத தத்ததன தானதன தானனன தானனன திக்குடுடு டூடமட டாடமட டூடுடுடு ...... எனதாளம் திக்குமுகி லாடஅரி யாடஅய னாடசிவ னொத்துவிளை யாடபரை யாடவர ராடபல திக்கசுரர் வாடசுரர் பாடமறை பாடஎதிர் ...... களமீதே எத்திசையு நாடியம னார்நிணமொ டாடபெல மிக்கநரி யாடகழு தாடகொடி யாடசமர் எற்றிவரு பூதகண மாடவொளி யாடவிடு ...... வடிவேலா எத்தியொரு மானைதினை காவல்வல பூவைதனை சித்தமலை காமுககு காநமசி வாயனொடு ரத்நகிரி வாழ்முருக னேயிளைய வாவமரர் ...... பெருமாளே. |
* ரத்னகிரி (மணிக்கிரி) - தேவாரம் பெற்ற திருத்தலம். இதற்கு 'வாட்போக்கி' என்றும் பெயர் உண்டு.திருச்சி மாவட்டம் குளித்தலை ரயில் நிலையத்தில் இருந்து 8 மைல் தொலைவில் இருக்கிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 566 - இரத்னகிரி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானதன, தத்ததன, தானனன, தீதிமித, வருகின்ற, எனப்படும், தேடிச், என்றும், உடல், சென்று, தேவர்கள், பெருமாளே, தித்திமித, கொலை, தீமிதத, தாளம், பலவும், கடலில்