பாடல் 55 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - .....;தாளம்
- .....
தந்தனா தந்தனத் தந்தனா தந்தனத் தந்தனா தந்தனத் ...... தனதான |
சங்குபோல் மென்கழுத் தந்தவாய் தந்தபற் சந்தமோ கின்பமுத் ...... தெனவானிற் றங்குகார் பைங்குழற் கொங்கைநீள் தண்பொருப் பென்றுதாழ் வொன்றறுத் ...... துலகோரைத் துங்கவேள் செங்கைபொற் கொண்டல்நீ யென்றுசொற் கொண்டுதாய் நின்றுரைத் ...... துழலாதே துன்பநோய் சிந்தநற் கந்தவே ளென்றுனைத் தொண்டினா லொன்றுரைக் ...... கருள்வாயே வெங்கண்வ்யா ளங்கொதித் தெங்கும்வே மென்றெடுத் துண்டுமே லண்டருக் ...... கமுதாக விண்டநா தன்திருக் கொண்டல்பா கன்செருக் குண்டுபே ரம்பலத் ...... தினிலாடி செங்கண்மால் பங்கயக் கண்பெறா தந்தரத் தின்கணா டுந்திறற் ...... கதிராழித் திங்கள்வா ழுஞ்சடைத் தம்பிரா னன்புறச் செந்தில்வாழ் செந்தமிழ்ப் ...... பெருமாளே. |
* சிவபெருமான் திருமாலைப் பாகமாகக் கொண்டவர் என்பது கருத்து.சங்கரன்கோவில் என்ற தலத்தில் 'சங்கரநாராயணன்' என்ற பெயர் பெற்றவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 55 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - என்றும், தந்தனா, உடைய, தந்தனத், விஷத்தை, தனது, சிவபெருமான், வாழ்கின்ற, கண்களை, அழகிய, பெருமாளே, செந்தமிழ்ப், அந்த, திரியாமலும், செய்யும், பொருந்தி