பாடல் 559 - திருசிராப்பள்ளி - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தனன தாத்தன தானா தானன தனன தாத்தன தானா தானன தனன தாத்தன தானா தானன ...... தந்ததான |
பொருளின் மேற்ப்ரிய காமா காரிகள் பரிவு போற்புணர் க்¡£டா பீடிகள் புருஷர் கோட்டியில் நாணா மோடிகள் ...... கொங்கைமேலே புடைவை போட்டிடு மாயா ரூபிகள் மிடிய ராக்குபொ லாமூ தேவிகள் புலையர் மாட்டும றாதே கூடிகள் ...... நெஞ்சமாயம் கருதொ ணாப்பல கோடா கோடிகள் விரகி னாற்பலர் மேல்வீழ் வீணிகள் கலவி சாத்திர நூலே யோதிகள் ...... தங்களாசைக் கவிகள் கூப்பிடு மோயா மாரிகள் அவச மாக்கிடு பேய்நீ ரூணிகள் கருணை நோக்கமி லாமா பாவிக ...... ளின்பமாமோ குருக டாக்ஷக லாவே தாகம பரம வாக்கிய ஞானா சாரிய குறைவு தீர்த்தருள் ஸ்வாமி கார்முக ...... வன்பரான கொடிய வேட்டுவர் கோகோ கோவென மடிய நீட்டிய கூர்வே லாயுத குருகு க்ஷேத்ரபு ரேசா வாசுகி ...... அஞ்சமாறும் செருப ராக்ரம கேகே வாகன சரவ ணோற்பவ மாலா லாளித திரள்பு யாத்திரி யீரா றாகிய ...... கந்தவேளே சிகர தீர்க்கம காசீ கோபுர முகச டாக்கர சேணா டாக்ருத திரிசி ராப்பளி வாழ்வே தேவர்கள் ...... தம்பிரானே. |
பொருளின் மேல் ஆசை கொண்ட காமமே உருவமாக ஆனவர்கள். அன்பு உடையவர்கள் போலச் சேரும் காம லீலைக்கு இருப்பிடம் ஆனவர்கள். ஆண்கள் கூட்டத்தில் வெட்கப்படாத செருக்கினர். மார்பின் மேல் புடைவையை எடுத்தெடுத்துப் போடும் மாயா உருவத்தினர். (தம்மிடம் வருவரை) வறியராக்குகின்ற பொல்லாத மூதேவிகள். கீழ் மக்களிடத்தும் மறுக்காமல் சேர்பவர்கள். (தமது) மனதில் வஞ்சனை (எண்ணங்கள்) கணக்கிட முடியாத பல கோடிக் கணக்காக உடையவர்கள். தந்திரத்தால் பலர் மேல் விழுகின்ற பயனற்றவர்கள். கலவி சாத்திர நூல்களையே படிப்பவர்கள். தங்களுக்கு ஆசையான பாடல்களைப் பாடும் கவிகளை அழைப்பதில் ஓயாத மழை போன்றவர்கள். தன் வசத்தை இழக்கச் செய்கின்ற கள்ளை உண்பவர்கள். இரக்கமுள்ள பார்வையே இல்லாத பெரிய பாவிகளாகிய விலை மகளிருடன் கூடுதல் நல்லதாகுமோ? குரு மூர்த்தியாகக் கடைக்கண் வைத்து அருள வல்லவனே, வேதம் ஆகமம் ஆகிய சிறப்பான மொழிகளை உபதேசிக்க வல்ல ஞான போதகனே, எனது குறைகள் எல்லாவற்றையும் நீக்க வல்ல ஸ்வாமியே, வில்லை ஏந்திய வலிமையாளரான பொல்லாத வேடர்கள் கோகோவென்று கூச்சலிட்டு இறக்கும்படி செலுத்திய கூர்மையான வேலாயுதனே, கோழியூர் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் ஈசனே, வாசுகி என்னும் பாம்பு பயப்படும்படி எதிர்த்து போர் செய்யும் வலிமை பொருந்திய மயிலை வாகனமாக உடையவனே, சரவணப் பொய்கையில் தோன்றியவனே, பெருமையால் அழகு பெற்ற திரண்ட புய மலைகள் பன்னிரண்டு கொண்ட கந்த வேளே, சிகரங்கள் நீண்ட பெரிய விசேஷமான கோபுர வாயிலில் வீற்றிருக்கும் (சரவணபவ என்ற) ஆறு அட்சரங்களுக்கு உரியவனே, விண்ணுலகம் போல் உயர்ந்த திரிசிராப்பள்ளியில் வீற்றிருப்பவனே, தேவர்கள் தம்பிரானே.
* குருகு த்ரபுரம் = கோழியூர் (உறையூர்). குருகு = கோழி.இங்கு யானையைக் கோழி வென்றமையால் இப்பெயர் வந்தது.திருச்சிக்கு அருகில் உள்ளது.
** கேகயம் = மயில்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 559 - திருசிராப்பள்ளி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மேல், தாத்தன, குருகு, தானன, தானா, பொல்லாத, உடையவர்கள், பெரிய, கோழியூர், கோழி, வீற்றிருக்கும், என்னும், ஆனவர்கள், வல்ல, தம்பிரானே, கலவி, மாயா, பொருளின், சாத்திர, வாசுகி, தேவர்கள், கோபுர, கொண்ட