பாடல் 553 - திருசிராப்பள்ளி - திருப்புகழ்

ராகம் -...;
தாளம் -
தனதனன தந்த தனதனன தந்த தனதனன தந்த ...... தனதான |
ஒருவரொடு கண்கள் ஒருவரொடு கொங்கை ஒருவரொடு செங்கை ...... யுறவாடி ஒருவரொடு சிந்தை ஒருவரொடு நிந்தை ஒருவரொடி ரண்டு ...... முரையாரை மருவமிக அன்பு பெருகவுள தென்று மனநினையு மிந்த ...... மருள்தீர வனசமென வண்டு தனதனன வென்று மருவுசர ணங்க ...... ளருளாயோ அரவமெதிர் கண்டு நடுநடுந டுங்க அடலிடுப்ர சண்ட ...... மயில்வீரா அமரர்முத லன்பர் முநிவர்கள்வ ணங்கி அடிதொழவி ளங்கு ...... வயலூரா திருவையொரு பங்கர் கமலமலர் வந்த திசைமுகன்ம கிழ்ந்த ...... பெருமானார் திகுதகுதி யென்று நடமிட முழங்கு த்ரிசிரகிரி வந்த ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 553 - திருசிராப்பள்ளி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - ஒருவரொடு, தனதனன, ஒருவரோடு, தந்த, தாமரை, ஒருவரை, மனத்தில், பெருமாளே, வந்த, திகுதகுதி, கொண்டும்