பாடல் 552 - திருசிராப்பள்ளி - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தனதன தத்தம் தனதன தத்தம் தனதன தத்தம் ...... தனதான |
பகலவ னொக்குங் கனவிய ரத்னம் பவளவெண் முத்தந் ...... திரமாகப் பயிலமு லைக்குன் றுடையவர் சுற்றம் பரிவென வைக்கும் ...... பணவாசை அகமகிழ் துட்டன் பகிடிம ருட்கொண் டழியும வத்தன் ...... குணவீனன் அறிவிலி சற்றும் பொறையிலி பெற்றுண் டலைதலொ ழித்தென் ...... றருள்வாயே சகலரு மெச்சும் பரிமள பத்மந் தருணப தத்திண் ...... சுரலோகத் தலைவர்ம கட்குங் குறவர்ம கட்குந் தழுவஅ ணைக்குந் ...... திருமார்பா செகதல மெச்சும் புகழ்வய லிக்குந் திகுதிகெ னெப்பொங் ...... கியவோசை திமிலைத விற்றுந் துமிகள்மு ழக்குஞ் சிரகிரி யிற்கும் ...... பெருமாளே. |
சூரியனைப் போன்று ஒளி வீசும் பெருமை வாய்ந்த ரத்தினம், பவளம் வெண்முத்து மாலைகள் நன்றாக நெருங்கி விளங்க மலை போன்ற மார்பகங்களை உடைய விலைமாதர்களின் கூட்டமே அன்புக்கு இடம் என வைக்கின்ற பண ஆசையில் உள்ளம் மகிழ்கின்ற துஷ்டன் நான். வெளி வேஷக்காரன். மோக மயக்கம் கொண்டு அழிகின்ற வீணன். இழி குணத்தோன். மூடன். கொஞ்சமும் பொறுமை இல்லாதவன். பொருள் தேடிப் பெற்றும், உண்டும் அவ்வாறு நான் அலைதலை ஒழித்து எப்போது அருள்வாய்? யாவரும் மெச்சும், நறு மணம் வீசும், தாமரை போன்ற இளமை வாய்ந்த திருவடிகளை உடையவனே, திண்ணிய தேவலோகத் தலைவரான இந்திரனுடைய மகள் தேவயானைக்கும் வேடர்கள் பெண்ணாகிய வள்ளிக்கும் தழுவ அணைக்கின்ற அழகிய மார்பை உடையவனே, பூவுலகம் போற்றுகின்ற புகழ் பெற்ற வயலூரிலும், திகுதிகு என்று பொங்கி எழும் ஒலி கொண்ட திமிலை, தவில், துந்துபிகளாகிய வாத்தியங்கள் முழங்கும் திரிசிரா மலையிலும் விளங்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 552 - திருசிராப்பள்ளி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, மெச்சும், தத்தம், உடையவனே, நான், பெருமாளே, வீசும், வாய்ந்த