பாடல் 546 - மயிலம் - திருப்புகழ்

ராகம் - ...; தாளம் -
தனதந்த தானன தானா தானா தனதந்த தானன தானா தானா தனதந்த தானன தானா தானா ...... தனதான |
கொலைகொண்ட போர்விழி கோலோ வாளோ விடமிஞ்சு பாதக வேலோ சேலோ குழைகொண்டு லாவிய மீனோ மானோ ...... எனுமானார் குயில்தங்கு மாமொழி யாலே நேரே யிழைதங்கு நூலிடை யாலே மீதூர் குளிர்கொங்கை மேருவி னாலே நானா ...... விதமாகி உலைகொண்ட மாமெழு காயே மோகா யலையம்பு ராசியி னூடே மூழ்கா வுடல்பஞ்ச பாதக மாயா நோயா ...... லழிவேனோ உறுதண்ட பாசமொ டாரா வாரா எனையண்டி யேநம னார்தூ தானோர் உயிர்கொண்டு போய்விடு நாள்நீ மீதா ...... ளருள்வாயே அலைகொண்ட வாரிதி கோகோ கோகோ எனநின்று வாய்விட வேநீள் மாசூ ரணியஞ்ச ராசனம் வேறாய் நீறா ...... யிடவேதான் அவிர்கின்ற சோதிய வாரார் நீள்சீ ரனலங்கை வேல்விடும் வீரா தீரா அருமந்த ரூபக ஏகா வேறோர் ...... வடிவாகி மலைகொண்ட வேடுவர் கானூ டேபோய் குறமங்கை யாளுட னேமா லாயே மயல்கொண்டு லாயவள் தாள்மீ தேவீழ் ...... குமரேசா மதிமிஞ்சு போதக வேலா ஆளா மகிழ்சம்பு வேதொழு பாதா நாதா மயிலந்தண் மாமலை வாழ்வே வானோர் ...... பெருமாளே. |
* ஐவகை பாதகங்கள்: கொலை, களவு, சூது, கள்ளுண்ணல், குரு நிந்தை ஆகியவை.
** மயிலம் அதே பெயருடைய ரயில் நிலையத்துக்கு 3 மைலில் தென் ஆற்காடு மாவட்டத்தில் விழுப்புரத்துக்கு அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 546 - மயிலம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானா, மீனோ, தனதந்த, உள்ள, கோகோ, தானன, கையில், வீசும், பெரிய, வாய்ந்த, நிறைந்த, என்னும், கொண்டு, பெருமாளே, பாதக, வாளோ, மானோ, யாலே, குளிர்ந்த, குமரேசா, நெருப்பு