பாடல் 539 - வள்ளிமலை - திருப்புகழ்

ராகம் -...; தாளம்
-
தனதந்த தந்தனம் தனதந்த தந்தனம் தனதந்த தந்தனம் ...... தனதான |
சிரமங்க மங்கைகண் செவிவஞ்ச நெஞ்சுசெஞ் சலமென்பு திண்பொருந் ...... திடுமாயம் சிலதுன்ப மின்பமொன் றிறவந்து பின்புசெந் தழலிண்கண் வெந்துசிந் ...... திடஆவி விரைவின்க ணந்தகன் பொரவந்த தென்றுவெந் துயர்கொண்ட லைந்துலைந் ...... தழியாமுன் வினையொன்று மின்றிநன் றியலொன்றி நின்பதம் வினவென்று அன்புதந் ...... தருள்வாயே அரவின்கண் முன்துயின் றருள்கொண்ட லண்டர்கண் டமரஞ்ச மண்டிவந் ...... திடுசூரன் அகலம்பி ளந்தணைந் தகிலம்ப ரந்திரங் கிடஅன்று டன்றுகொன் ...... றிடும்வேலா மரைவெங்க யம்பொருந் திடவண்டி னங்குவிந் திசையொன்ற மந்திசந் ...... துடனாடும் வரையின்கண் வந்துவண் குறமங்கை பங்கயம் வரநின்று கும்பிடும் ...... பெருமாளே. |
* வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராய வேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில், திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது. வள்ளி தேவியர் அவதரித்த தலம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 539 - வள்ளிமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதந்த, வந்து, தந்தனம், தாமரை, வள்ளி, ஒலிக்க, முன்பு, அழகிய, பெருமாளே, அருள்