பாடல் 53 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - கரஹரப்ரியா;
தாளம் - சதுஸ்ர ரூபகம் - 6 - ஏடுப்பு 3/4 இடம்
தந்தன தானான தானன தந்தன தானான தானன தந்தன தானான தானன ...... தனதான |
கொம்பனை யார்காது மோதிரு கண்களி லாமோத சீதள குங்கும பாடீர பூஷண ...... நகமேவு கொங்கையி னீராவி மேல்வளர் செங்கழு நீர்மாலை சூடிய கொண்டையி லாதார சோபையில் ...... மருளாதே உம்பர்கள் ஸ்வாமிந மோநம எம்பெரு மானேந மோநம ஒண்டொடி மோகாந மோநம ...... எனநாளும் உன்புக ழேபாடி நானினி அன்புட னாசார பூசைசெய் துய்ந்திட வீணாள்ப டாதருள் ...... புரிவாயே பம்பர மேபோல ஆடிய சங்கரி வேதாள நாயகி பங்கய சீபாத நூபுரி ...... கரசூலி பங்கமி லாநீலி மோடிப யங்கரி மாகாளி யோகினி பண்டுசு ராபான சூரனொ ...... டெதிர்போர்கண் டெம்புதல் வாவாழி வாழியெ னும்படி வீறான வேல்தர என்றுமு ளானேம நோகர ...... வயலூரா இன்சொல்வி சாகாக்ரு பாகர செந்திலில் வாழ்வாகி யேயடி யென்றனை யீடேற வாழ்வருள் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 53 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - போற்றி, பெருமானே, தந்தன, மோநம, தானன, தானான, வாழ்க, பெருமாளே, சங்கரி, சூடிய