பாடல் 526 - திருவேங்கடம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தனதான தனத்த தனத்த தனத்த தனத்தன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன ...... தனதான |
நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்பக் கச்சிக் கச்சுற் றறன்மேவி நெறித்து வெறித்து இருட்டை வெருட்டிய நிரைதரு மருமலர் செருகிடு பரிமள நிறையுறை மதுகர ...... நெடிதாடி நிச்சிக் கச்சப் பட்டுச் சிக்கற் றொப்புக் கொப்புக் குயர்வாகி நெளித்த சுளித்த விழைக்கு ளழைத்துமை நிகரென வகருவு முகுபுகை தொகுமிகு நிகழ்புழு கொழுகிய ...... குழன்மேலும் வச்ரப் பச்சைப் பொட்டிட் டப்பொட் டுக்குட் செக்கர்ப் ப்ரபைபோல வளைத்த தழைத்த பிறைக்கு முறைக்குமன் மதசிலை யதுவென மகபதி தனுவென மதிதில தமும்வதி ...... நுதன்மேலும் மச்சச் செச்சைச் சித்ரச் சத்ரப் பொற்பக் கத்திச் சையனாகி மனத்தி னனைத்து மணைத்த துணைப்பத மலரல திலைநிலை யெனமொழி தழியமெய் வழிபட லொழிவனை ...... யருள்வாயே நச்சுத் துச்சொப் பிச்சுக் குட்டத் துட்டக் கட்டத் தசிகாண நடத்தி விடத்தை யுடைத்த படத்தினில் நடநவில் கடலிடை யடுபடை தொடுமுகில் நகைமுக திருவுறை ...... மணிமார்பன் நத்தத் தைச்சக் ரத்தைப் பத்மத் தைக்கைப் பற்றிப் பொருமாய னரிக்கு மரிக்கு மெரிக்கும் விருப்புற நசிதரு நிசிசர ருடகுட லிடல்செய்த நரகரி யொருதிரு ...... மருகோனே கச்சுத் தச்சுப் பொற்கட் டிட்டுப் பட்டுக் குட்பட் டமுதாலுங் கருப்பி ரசத்து முருச்செய் துவைச்சிடு கனதன பரிமள முழுகுப னிருபுய கனகதி வியமணி ...... யணிமார்பா கைச்சத் திக்குக் கெற்சித் தொக்கப் பட்சிக் கக்கொட் டசுராதி கறுத்த நிறத்த அரக்கர் குலத்தொடு கறுவிய சிறியவ கடவைகள் புடைபடு கடவட மலையுறை ...... பெருமாளே. |
* ஆற்றில் கழு முனைகளை மறைவாக நிறுத்தி, அங்கே பீமனைக் குதித்து விளையாடச் செய்தான் துரியோதனன்.அந்த ஆபத்தான இடத்தை வண்டுகளால் காட்டிப் பீமனைக் கண்ணன் காப்பாற்றினார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 526 - திருவேங்கடம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தத், தனதன, உள்ள, அந்த, தனத்த, விஷம், என்னும், மீது, உடைய, செய்து, பீமனைக், கையில், உறையும், அழகிய, திருமால், என்னும்படி, பிறைக்கு, பச்சைப், பரிமள, தனதான, பெருமாளே, உடையதாய், வில், சிவந்த, மேலும், விளங்கும், தக்க