பாடல் 521 - கயிலைமலை - திருப்புகழ்

ராகம் - அடானா;
தாளம் - கண்டசாபு - 2 1/2
தனதனனத் ...... தனதான தனதனனத் ...... தனதான |
புமியதனிற் ......ப்ரபுவான புகலியில்வித் ...... தகர்போல அமிர்தகவித் ...... தொடைபாட அடிமைதனக் ...... கருள்வாயே சமரிலெதிர்த் ...... தசுர்மாளத் தனியயில்விட் ...... டருள்வோனே நமசிவயப் ...... பொருளானே ரசதகிரிப் ...... பெருமாளே. |
* புகலி = சீர்காழி: உலகமே அழியினும் அழியாத தலமாகிய சீர்காழிதான் தேவர்களுக்கும் புகலிடம் என்பதால் புகலி என்ற பெயர் பெற்றது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 521 - கயிலைமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - புகலி, பெருமாளே, தனதான, தனதனனத்