பாடல் 496 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - வாசஸ்பதி
; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2
தகிடதகதிமி-3 1/2
தகிடதகதிமி-3 1/2
தனன தானன தனன தானன தனன தானன ...... தனதான |
இருளு மோர்கதி ரணுகொ ணாதபொ னிடம தேறியெ ...... னிருநோயும் எரிய வேமல மொழிய வேசுட ரிலகு மூலக ...... வொளிமேவி அருவி பாயஇ னமுத மூறவுன் அருளெ லாமென ...... தளவாக அருளி யேசிவ மகிழ வேபெற அருளி யேயிணை ...... யடிதாராய் பரம தேசிகர் குருவி லாதவர் பரவை வான்மதி ...... தவழ்வேணிப் பவள மேனியர் எனது தாதையர் பரம ராசியர் ...... அருள்பாலா மருவி நாயெனை யடிமை யாமென மகிழ்மெய் ஞானமு ...... மருள்வோனே மறைகு லாவிய புலியுர் வாழ்குற மகள்மெ லாசைகொள் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 496 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, யான், மகிழ்ந்து, பெருமாளே, எனது, அருவி, அருளி