பாடல் 495 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனதனா தத்ததன தனதனா தத்ததன தனதனா தத்ததன தானனந் தனன தனதனா தத்ததன தனதனா தத்ததன தனதனா தத்ததன தானனந் தனன தனதனா தத்ததன தனதனா தத்ததன தனதனா தத்ததன தானனந் தனன ...... தந்ததான |
இரசபா கொத்தமொழி யமுர்தமா ணிக்கநகை யிணையிலா சத்திவிழி யார்பசும் பொனிரர் எழிலிநே ரொத்தஇரு ளளகபா ரச்செயல்க ளெழுதொணா தப்பிறையி னாரரும் புருவர் எழுதுதோ டிட்டசெவி பவளநீ லக்கொடிக ளிகலியா டப்படிக மோடடும் பொனுரு ...... திங்கள்மேவும் இலவுதா வித்தஇதழ் குமிழைநே ரொத்தஎழி லிலகுநா சிக்கமுகு மாலசங் கினொளி யிணைசொல்க்¡£ வத்தரள வினவொள்தா லப்பனையி னியல்கலா புத்தகமொ டேர்சிறந் தவடி யிணையிலா னைக்குவடெ னொளிநிலா துத்திபட ரிகலியா ரத்தொடையு மாருமின் பரச ...... தங்கமார்பின் வரிகள்தா பித்தமுலை யிசையஆ லிற்றளிரின் வயிறுநா பிக்கமல மாமெனுஞ் சுழிய மடுவுரோ மக்கொடியென் அளிகள்சூழ் வுற்றநிரை மருவுநூ லொத்தஇடை யாரசம் பையல்குல் மணமெலா முற்றநறை கமலபோ துத்தொடையென் வளமையார் புக்கதலி சேருசெம் பொனுடை ...... ரம்பைமாதர் மயலதா லிற்றடியெ னவர்கள்பா லுற்றுவெகு மதனபா ணத்தினுடன் மேவிமஞ் சமிசை வதனம்வேர் வுற்றவிர முலைகள்பூ ரிக்கமிடர் மயில்புறா தத்தைகுயில் போலிலங் கமளி வசனமாய் பொத்தியிடை துவளமோ கத்துளமிழ் வசமெலாம் விட்டுமற வேறுசிந் தனையை ...... தந்துஆள்வாய் முரசுபே ரித்திமிலை துடிகள்பூ ரித்தவில்கள் முருடுகா ளப்பறைகள் தாரைகொம் புவளை முகடுபேர் வுற்றவொலி யிடிகள்போ லொத்தமறை முதுவர்பா டிக்குமுற வேயிறந் தசுரர் முடிகளோ டெற்றியரி யிரதமா னைப்பிணமொ டிவுளிவே லைக்குருதி நீர்மிதந் துதிசை ...... யெங்குமோட முடுகிவேல் விட்டுவட குவடுவாய் விட்டமரர் முநிவரா டிப்புகழ வேதவிஞ் சையர்கள் முழவுவீ ணைக்கினரி யமுர்தகீ தத்தொனிகள் முறையதா கப்பறைய வோதிரம் பையர்கள் முலைகள்பா ரிக்கவுட னடனமா டிற்றுவர முடிபதா கைப்பொலிய வேநடங் குலவு ...... கந்தவேளே அரசுமா கற்பகமொ டகில்பலா இர்ப்பைமகி ழழகுவே யத்திகமு கோடரம் பையுடன் அளவிமே கத்திலொளிர் வனமொடா டக்குயில்க ளளிகள்தோ கைக்கிளிகள் கோவெனம் பெரிய அமுர்தவா விக்கழனி வயலில்வா ளைக்கயல்க ளடையுமே ரக்கனக நாடெனும் புலியுர் ...... சந்தவேலா அழகுமோ கக்குமரி விபுதையே னற்புனவி யளிகுலா வுற்றகுழல் சேர்கடம் புதொடை அரசிவே தச்சொருபி கமலபா தக்கரவி யரியவே டச்சிறுமி யாளணைந் தபுகழ் அருணரூ பப்பதமொ டிவுளிதோ கைச்செயல்கொ டணைதெய்வா னைத்தனமு மேமகிழ்ந் துபுணர் ...... தம்பிரானே. |
சுவை நிறைந்த சர்க்கரை போன்ற சொற்கள், அமுத மாணிக்கம் போன்ற பற்கள், நிகரில்லாத வேல் போன்ற கண்களை உடையவர்கள். பசும் பொன் போன்ற தன்மை உடையவர்கள். மேகத்துக்கு ஒப்பான கருத்த கூந்தல் பாரத்தை உடைய செயலினர். எழுதற்கு முடியாத பிறை போன்ற அரிய புருவத்தினர். எழுதினது போல் அமைந்துள்ள தோடு இட்ட காது. பவளக் கொடியும் நீலக் கொடியும் ஒன்றோடு ஒன்று மாறுபட்டு ஆடுவது போல் படிகத்தை வென்ற தெளிவும், பொன்னின் உருவமும் கொண்டதுமான மதி போன்ற முகத்தில் உள்ள இலவம் பூப் போல அமைந்துள்ள வாயிதழ். குமிழம் பூவுக்கு ஒப்பான அழகு பெற்று விளங்கும் மூக்கு. கமுகு போன்றும் திருமாலின் ஒளிவீசும் சங்குக்கு இணை சொல்லக் கூடியதுமான கழுத்தில் முத்து மாலைக் கூட்டம். ஒளி வீசும் பனை ஓலையால் அமைந்துள்ள பெருமை வாய்ந்த நூல் எழுதப்பட்ட ஓலைப் புத்தகம் போல அழகிய சிறந்த பாதம். ஒப்பு இல்லாத யானை, மலை என்று சொல்லும்படியானதும், ஒளி நிலவுகின்றதும், தேமல் படர்ந்ததும், பிணைந்துள்ள முத்து மாலை அணிந்துள்ளதும், நிறைந்த இன்ப ரசத்தைக் கொண்டுள்ளதுமான தங்க வடிவான மார்பில் ரேகைகள் கொண்டதுமான மார்பகங்கள். சொல்லத்தக்க ஆலின் தளிர் இலை போன்ற வயிறு. கொப்பூழ் என்பது தாமரை மொட்டுப் போன்றது. நீர்ச்சுழி, மடு, மயிர்க் கொடி என்கின்ற வண்டுகள் சூழ்ந்த வரிசை. பொருந்திய நூல் போன்று நுண்ணியதான இடுப்பு நிறைந்த செழிப்புள்ள மின்னல். பெண்குறி நறுமணம் எல்லாம் உள்ள தேன் நிறை தாமரைப் பூ. தொடை என்பது செழிப்பு நிறைந்த வாழைத் தண்டு. இங்ஙனம் சேர்ந்துள்ள செம்பொன் ஆடை அணிந்துள்ள, தெய்வப் பெண்ணாகிய ரம்பை போன்ற விலைமாதர்களின் காம மயக்கத்தால் அடியேனாகிய நான் மனம் ஒடிந்து அவர்களிடமே பொருந்தி இருந்து, நிரம்ப மன்மதனுடைய பாணங்களால் தாக்கப்பட்டு, கட்டிலின் மேல் முகம் வேர்வை அடைந்து விளங்க, மார்பகங்கள் புளகித்துப் பூரிக்க, கழுத்தினின்றும் மயில், புறா, கிளி, குயில் முதலியனவற்றைப் போல (புட்குரல்கள்) விளங்கி ஒலிக்க, படுக்கைப் பேச்சாய் நிறைந்து, இடை துவள, அந்த மாதர்களுடைய மோகத்துள் அமிழ்கின்ற குண நிலைமை எல்லாம் விட்டு ஒழிவதற்காக, (நல்ல) சிந்தனைகளை எனக்குத் தந்து அருளுக. முரசு, பேரிகை, திமிலை முதலிய பறை வகைகள், உடுக்கைகள், ஊதுங் கருவி வகை, தவில் முதலிய மேள வகைகள், மத்தள வகைகள், எக்காளம், நீண்ட ஊது குழல், ஊதுங் கொம்பு, சங்கு ஆகியவை ஆகாச முகட்டையும் அசைக்கும்படி ஒலியாய் இடிகள் இடிப்பது போல முழங்க, வேதம் வல்ல பெரியோர்கள் பாடி ஒலி எழுப்ப, இறந்து போன அசுரர்களின் தலைகளை அடித்துத் தள்ளி, சிங்கம், தேர், யானைப் பிணங்களோடு, குதிரை ஆகியவை ரத்தக் கடலில் மிதந்து பல திக்குகளிலும் ஓட, வேகமாக வேலாயுதத்தைச் செலுத்தி வடக்கே உள்ள மேரு மலை கலங்கிக் குலுங்க, தேவர்களும் முனிவர்களும் ஆடிப் புகழ, வேதம் வல்ல புலவர்கள் குட முழா என்ற பறை, வீணை, கி(ன்)னரியாழ் (இவைகளின்) அமுத கீதம் போன்ற ஒலிகளுடன் முறை முறையாக ஒலியை எழுப்பி ஓதிட, ரம்பை முதலான தேவமாதர்களின் மார்பகங்கள் கனக்க, ஒன்று கூடி நடனம் ஆடினவராய் வர, மகுடமும் கொடியும் விளங்கவே முருகன் ஆடலான குடைக்கூத்தும் துடைக்கூத்தும் ஆடி விளங்கிய கந்த வேளே, அரச மரம், மாமரம், தென்னை இவற்றுடன் அகில், பலா மரம், இலுப்பை மரம், மகிழ மரம், அழகான மூங்கில், அத்தி மரம், கமுக மரம், இவற்றுடன் வாழை மரம் (கலந்து) மேக மண்டலம் வரை உயர்ந்த செழித்த சோலைகளில் உலவும் குயில்கள், வண்டுகள், மயில்கள், கிளிகள் கோ என்று ஒலி செய்ய, பெரிதான அமுத நீரைக் கொண்ட குளங்களிலும், கழனிகளிலும், வயல்களிலும் வாளை மீன்களுடன் கயல் மீன்களும் அடைகின்ற அழகினிலே, அந்தப் பொன்னுலகம் என்று சொல்லும்படியான சிதம்பரத்தில் வீற்றிருக்கும் அழகிய வேலனே, அழகும் ஆசையும் கொண்ட குமரி, தேவதை போன்றவள், தினைப் புனத்தில் இருப்பவள், வண்டுகள் குலவும் கூந்தலில் சேர்ந்துள்ள கடப்ப மாலையை உடைய அரசி, வேத உருவம் கொண்டவள், தாமரை போன்ற சிவந்த பாதங்களை உடைய அருமை வாய்ந்த வேடப் பெண்ணாகிய வள்ளி நாயகி அணைந்த புகழையும் கொண்டு, சிவந்த உருவம் கொண்ட பதங்களுடன், கலாபம் கொண்ட குதிரையாம் மயில் மீது ஏறின நீ அணைந்த தேவயானையின் மார்பகங்களையும் மகிழ்ந்து அவளையும் சேர்ந்த தம்பிரானே.
* சந்தம் பற்றி நீரார் என்பது நிரர் என வந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 495 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனா, தத்ததன, மரம், நிறைந்த, கொண்ட, உள்ள, கொடியும், என்பது, அமைந்துள்ள, வண்டுகள், வகைகள், மார்பகங்கள், அமுத, தானனந், உடைய, ஆகியவை, முதலிய, தம்பிரானே, ஊதுங், வேதம், யிணையிலா, சிவந்த, அணைந்த, உருவம், இவற்றுடன், மயில், வல்ல, பெண்ணாகிய, வாய்ந்த, நூல், முத்து, கொண்டதுமான, ஒன்று, அழகிய, ஒப்பான, சேர்ந்துள்ள, போல், எல்லாம், தாமரை, உடையவர்கள், ரம்பை