பாடல் 493 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - அடாணா;
தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2
தகதிமி-2, தகிட-1 1/2
தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தனன தனதன தனன தனதன தனன ...... தனதான |
எழுகடல் மணலை அளவிடி னதிக மெனதிடர் பிறவி ...... அவதாரம் இனியுன தபய மெனதுயி ருடலு மினியுடல் விடுக ...... முடியாது கழுகொடு நரியு மெரிபுவி மறலி கமலனு மிகவு ...... மயர்வானார் கடனுன தபய மடிமையு னடிமை கடுகியு னடிகள் ...... தருவாயே விழுதிக ழழகி மரகத வடிவி விமலிமு னருளு ...... முருகோனே விரிதல மெரிய குலகிரி நெரிய விசைபெறு மயிலில் ...... வருவோனே எழுகடல் குமுற அவுணர்க ளுயிரை யிரைகொளும் அயிலை ...... யுடையோனே இமையவர் முநிவர் பரவிய புலியு ரினில்நட மருவு ...... பெருமாளே. |
* வணங்கிய முனிவர்கள் வியாக்கிரபாதர், பதஞ்சலி, உபமன்யு, வசிஷ்டர் ஆகியோர் ஆவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 493 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, உன்னிடம், ஆகும், பெருமாளே, மயிலில், எழுகடல், முடியாது