பாடல் 482 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் -....;
தாளம் -
தானத் தான தத்த தானத் தான தத்த தானத் தான தத்த ...... தனதான |
காதைக் காதி மெத்த மோதிக் கேள்வி யற்ற காமப் பூச லிட்டு ...... மதியாதே காரொத் தேய்நி றத்த வோதிக் காவ னத்தி னீழற் கேத ருக்கி ...... விளையாடிச் சேதித் தேக ருத்தை நேருற் றேபெ ருத்த சேலொத் தேவ ருத்தும் ...... விழிமானார் தேமற் பார வெற்பில் மூழ்கித் தாப மிக்க தீமைக் காவி தப்ப ...... நெறிதாராய் மாதைக் காத லித்து வேடக் கான கத்து வாசத் தாள்சி வப்ப ...... வருவோனே வாரிக் கேயொ ளித்த மாயச் சூரை வெட்டி மாளப் போர்தொ லைத்த ...... வடிவேலா வீதித் தேர்ந டத்து தூளத் தால ருக்கன் வீரத் தேர்ம றைத்த ...... புலியூர்வாழ் மேலைக் கோபு ரத்து மேவிக் கேள்வி மிக்க வேதத் தோர்து தித்த ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 482 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மிக்க, தத்த, தானத், கேள்வி, உடைய, பெருமாளே, வெட்டி, காமப், வீரத்