பாடல் 480 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தத்தத் தானன தானன தானன தத்தத் தானன தானன தானன தத்தத் தானன தானன தானன ...... தனதான |
அக்குப் பீளைமு ளாவிளை மூளையொ டுப்புக் காய்பனி நீர்மயிர் தோல்குடி லப்புச் சீபுழு வோடடை யார்தசை ...... யுறமேவி அத்திப் பால்பல நாடிகு ழாயள்வ ழுப்புச் சார்வல மேவிளை யூளைகொ ளச்சுத் தோல்குடி லாமதி லேபொறி ...... விரகாளர் சுக்கத் தாழ்கட லேசுக மாமென புக்கிட் டாசைபெ ணாசைம ணாசைகள் தொக்குத் தீவினை யூழ்வினை காலமொ ...... டதனாலே துக்கத் தேபர வாமல்ச தாசிவ முத்திக் கேசுக மாகப ராபர சொர்க்கப் பூமியி லேறிட வேபத ...... மருள்வாயே தக்கத் தோகிட தாகிட தீகிட செக்கச் சேகண தாகண தோகண தத்தத் தானன டீகுட டாடுடு ...... வெனதாளந் தத்திச் சூரர்கு ழாமொடு தேர்பரி கெட்டுக் கேவல மாய்கடல் மூழ்கிட சத்திக் கேயிரை யாமென வேவிடு ...... கதிர்வேலா திக்கத் தோகண தாவென வேபொரு சொச்சத் தாதையர் தாமென வேதிரு செக்கர்ப் பாதம தேபதி யாசுதி ...... யவைபாடச் செப்பொற் பீலியு லாமயில் மாமிசை பக்கத் தேகுற மாதொடு சீர்பெறு தெற்குக் கோபுர வாசலில் மேவிய ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 480 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, தத்தத், தோகண, வாசலில், கோபுர, தெற்குக், பெருமாளே, அடைந்து, வினை, சேர்ந்து, பக்கத்தில், இவ்வுடலில், திக்கத், டீகுட, தோகிட, தக்கத், தோல்குடி, தாகிட, தீகிட, தாகண, சேகண, செக்கச், டாடுடு