பாடல் 478 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தய்யதன தானனத் தானனந் தானதன தய்யதன தானனத் தானனந் தானதன தய்யதன தானனத் தானனந் தானதன ...... தனதான |
முல்லைமலர் போலுமுத் தாயுதிர்ந் தானநகை வள்ளைகொடி போலுநற் காதிலங் காடுகுழை முல்லைமலர் மாலைசுற் றாடுகொந் தாருகுழ ...... லலைபோதம் மொள்குசிலை வாணுதற் பார்வையம் பானகயல் கிள்ளைகுர லாரிதழ்ப் பூவெனும் போதுமுக முன்னல்கமு கார்களத் தோய்சுணங் காயமுலை ...... மலையானை வல்லகுவ டாலிலைப் போலுசந் தானவயி றுள்ளதுகில் நூலிடைக் காமபண் டாரஅல்குல் வழ்ழைதொடை யார்மலர்க் காலணிந் தாடுபரி ...... புரவோசை மல்லிசலி யாடபட் டாடைகொண் டாடமயல் தள்ளுநடை யோடுசற் றேமொழிந் தாசைகொடு வல்லவர்கள் போலபொற் சூறைகொண் டார்கள்மய ...... லுறவாமோ அல்லல்வினை போகசத் தாதிவிண் டோடநய வுள்ளமுற வாகவைத் தாளுமெந் தாதைமகி ழள்ளமைய ஞானவித் தோதுகந் தாகுமர ...... முருகோனே அன்னநடை யாள்குறப் பாவைபந் தாடுவிரல் என்னுடைய தாய்வெண்முத் தார்கடம் பாடுகுழல் அன்னைவலி சேர்தனக் கோடிரண் டானவளி ...... மணவாளா செல்லுமுக ஏழ்கடற் பாழிவிண் டோடதிர வல்லசுரர் சேனைபட் டேமடிந் தேகுருதி செல்லதிசை யோடுவிட் டாடுசிங் காரமுக ...... வடிவேலா தெள்ளுதமிழ் பாடியிட் டாசைகொண் டாடசசி வல்லியொடு கூடிதிக் கோர்கள்கொண் டாடஇயல் தில்லைநகர் கோபுரத் தேமகிழ்ந் தேகுலவு ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 478 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உடைய, தானனத், மலர், உள்ள, போன்றதும், அசைகின்ற, தானதன, தய்யதன, தானனந், வன்மை, போல், புகழ்ந்து, விளங்கும், மேல், முத்துக்கள், என்னுடைய, முல்லைமலர், பெருமாளே, முல்லை, மாலை, போலவும், உடையவர்கள்