பாடல் 466 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனனந் தனத்த தந்த தனனந் தனத்த தந்த தனனந் தனத்த தந்த ...... தனதான |
மதவெங் கரிக்கி ரண்டு வலுகொம் பெனத்தி ரண்டு வளரும் தனத்த ணிந்த ...... மணியாரம் வளைசெங் கையிற்சி றந்த வொளிகண் டுநித்தி லங்கு வரருந் திகைத்தி ரங்க ...... வருமானார் விதவிங் கிதப்ரி யங்கள் நகைகொஞ் சுதற்கு ணங்கள் மிகைகண் டுறக்க லங்கி ...... மருளாதே விடுசங் கையற்று ணர்ந்து வலம்வந் துனைப்பு கழ்ந்து மிகவிஞ் சுபொற்ப தங்கள் ...... தருவாயே நதியுந் திருக்க ரந்தை மதியுஞ் சடைக்க ணிந்த நடநம் பருற்றி ருந்த ...... கயிலாய நகமங் கையிற்பி டுங்கு மசுரன் சிரத்தொ டங்கம் நவதுங் கரத்ந முந்து ...... திரடோளுஞ் சிதையும் படிக்கொ ரம்பு தனைமுன் தொடுத்த கொண்டல் திறல்செங் கணச்சு தன்றன் ...... மருகோனே தினமுங் கருத்து ணர்ந்து சுரர்வந் துறப்ப ணிந்த திருவம் பலத்த மர்ந்த ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 466 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்த, தனனந், ணிந்த, தந்த, அழகிய, கொள்ளாமல், விளங்கும், பார்த்து, உன்னைத், கயிலாய, ரண்டு, ணர்ந்து, பெருமாளே, மாலை