பாடல் 463 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தந்த தந்தன தந்த தந்தன தந்த தந்தன தந்த தந்தன தந்த தந்தன தந்த தந்தன ...... தந்ததான |
கொந்த ரங்குழ லிந்து வண்புரு வங்கள் கண்கய லுஞ்ச ரங்கணை கொண்ட ரம்பைய ரந்த முஞ்சசி ...... துண்டமாதர் கொந்த ளங்கதி ரின்கு லங்களி னுஞ்சு ழன்றிர சம்ப லங்கனி கொண்ட நண்பித ழின்சு கங்குயி ...... லின்சொல்மேவுந் தந்த வந்தர ளஞ்சி றந்தெழு கந்த ரங்கமு கென்ப பைங்கழை தண்பு யந்தளி ரின்கு டங்கைய ...... ரம்பொனாரந் தந்தி யின்குவ டின்த னங்களி ரண்டை யுங்குலை கொண்டு விண்டவர் தங்க டம்படி யுங்க வண்டிய ...... சிந்தையாமோ மந்த ரங்கட லுஞ்சு ழன்றமிர் தங்க டைந்தவ னஞ்சு மங்குலி மந்தி ரஞ்செல்வ முஞ்சு கம்பெற ...... எந்தவாழ்வும் வந்த ரம்பையெ ணும்ப கிர்ந்துந டங்கொ ளுந்திரு மங்கை பங்கினன் வண்டர் லங்கையு ளன்சி ரம்பொடி ...... கண்டமாயோன் உந்தி யின்புவ னங்க ளெங்கும டங்க வுண்டகு டங்கை யன்புக ழொண்பு ரம்பொடி கண்ட எந்தையர் ...... பங்கின்மேவும் உம்ப லின்கலை மங்கை சங்கரி மைந்த னென்றய னும்பு கழ்ந்திட வொண்ப ரந்திரு வம்ப லந்திகழ் ...... தம்பிரானே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 463 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, கொண்ட, தந்தன, போலவும், மங்கை, அழகிய, உடையவர்கள், உள்ள, கடலில், புகழ, எல்லா, உள்ளங்கையை, தம்பிரானே, ரின்கு, கொந்த, கொண்டு, தங்க, ரம்பொடி, சந்திரன்