பாடல் 462 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் -...; தாளம் -
தனதன தனத்தத் தந்த தந்தன தனதன தனத்தத் தந்த தந்தன தனதன தனத்தத் தந்த தந்தன ...... தனதான |
திருடிக ளிணக்கிச் சம்ப ளம்பறி நடுவிகள் மயக்கிச் சங்க முண்கிகள் சிதடிகள் முலைக்கச் சும்பல் கண்டிகள் ...... சதிகாரர் செவிடிகள் மதப்பட் டுங்கு குண்டிகள் அசடிகள் பிணக்கிட் டும்பு றம்பிகள் செழுமிக ளழைத்திச் சங்கொ ளுஞ்செயர் ...... வெகுமோகக் குருடிகள் நகைத்திட் டம்பு லம்புக ளுதடிகள் கணக்கிட் டும்பி ணங்கிகள் குசலிகள் மருத்திட் டுங்கொ டுங்குணர் ...... விழியாலே கொளுவிகள் மினுக்குச் சங்கி ரங்கிகள் நடனமு நடித்திட் டொங்கு சண்டிகள் குணமதில் முழுச்சுத் தசங்க்ய சங்கிக ...... ளுறவாமோ இருடிய ரினத்துற் றும்ப தங்கொளு மறையவ னிலத்தொக் குஞ்சு கம்பெறு மிமையவ ரினக்கட் டுங்கு லைந்திட ...... வருசூரர் இபமொடு வெதித்தச் சிங்க மும்பல இரதமொ டெதத்திக் கும்பி ளந்திட இவுளியி ரதத்துற் றங்க மங்கிட ...... விடும்வேலா அரிகரி யுரித்திட் டங்க சன்புர மெரிதர நகைத்துப் பங்க யன்சிர மளவொடு மறுத்துப் பண்ட ணிந்தவ ...... ரருள்கோனே அமரர்த மகட்கிட் டம்பு ரிந்துநல் குறவர்த மகட்பக் கஞ்சி றந்துற அழகிய திருச்சிற் றம்ப லம்புகு ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 462 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, கொண்டவர்கள், தந்தன, தனத்தத், தந்த, குணம், கொள்ளுபவர்கள், விளங்கும், கூட்டமும், தமது, படைத்தவர்கள், பெருமாளே, டுங்கு, குருடிகள், டம்பு, அழகிய, செய்பவர்கள்