பாடல் 458 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் -...; தாளம்
-
தனத்தத்தம் தனத்தத்தத் தனத்தத்தம் தனத்தத்தத் தனத்தத்தம் தனத்தத்தத் ...... தனதான |
கதித்துப்பொங் கலுக்கொத்துப் பணைத்துக்கொம் பெனத்தெற்றிக் கவித்துச்செம் பொனைத்துற்றுக் ...... குழலார்பின் கழுத்தைப்பண் புறக்கட்டிச் சிரித்துத்தொங் கலைப்பற்றிக் கலைத்துச்செங் குணத்திற்பித் ...... திடுமாதர் பதித்துத்தந் தனத்தொக்கப் பிணித்துப்பண் புறக்கட்டிப் பசப்பிப்பொன் தரப்பற்றிப் ...... பொருள்மாளப் பறித்துப்பின் துரத்துச்சொற் கபட்டுப்பெண் களுக்கிச்சைப் பலித்துப்பின் கசுத்திப்பட் ...... டுழல்வேனோ கதித்துக்கொண் டெதிர்த்துப்பிற் கொதித்துச்சங் கரித்துப்பற் கடித்துச்சென் றுழக்கித்துக் ...... கசுரோரைக் கழித்துப்பண் டமர்க்குச்செப் பதத்தைத்தந் தளித்துக்கைக் கணிக்குச்சந் தரத்தைச்சுத் ...... தொளிர்வேலா சிதைத்திட்டம் புரத்தைச்சொற் கயத்தைச்சென் றுரித்துத்தற் சினத்தக்கன் சிரத்தைத்தட் ...... சிவனார்தஞ் செவிக்குச்செம் பொருட்கற்கப் புகட்டிச்செம் பரத்திற்செய்த் திருச்சிற்றம் பலச்சொக்கப் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 458 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தத்தம், அழகிய, கொண்ட, தனத்தத்தத், பின்னர், சென்று, செவ்விய, அடைந்து, நன்றாகக், பெருமாளே, உடைய, விலைமாதர்களின், பெற்ற