பாடல் 457 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - தர்பார்;
தாளம் - ஆதி - 4 களை - 32
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தந்த தந்தனத் தான தந்ததன தந்த தந்தனத் தான தந்ததன தந்த தந்தனத் தான தந்ததன் ...... தந்ததான |
வந்து வந்துவித் தூறி யென்றனுடல் வெந்து வெந்துவிட் டோட நொந்துயிரும் வஞ்சி னங்களிற் காடு கொண்டவடி ...... வங்களாலே மங்கி மங்கிவிட் டேனை யுன்றனது சிந்தை சந்தொஷித் தாளு கொண்டருள வந்து சிந்துரத் தேறி யண்டரொடு ...... தொண்டர்சூழ எந்தன் வஞ்சனைக் காடு சிந்திவிழ சந்த ரண்டிசைத் தேவ ரம்பையர்க னிந்து பந்தடித் தாடல் கொண்டுவர ...... மந்திமேவும் எண்க டம்பணித் தோளு மம்பொன்முடி சுந்த ரந்திருப் பாத பங்கயமும் என்றன் முந்துறத் தோணி யுன்றனது ...... சிந்தைதாராய் அந்த ரந்திகைத் தோட விஞ்சையர்கள் சிந்தை மந்திரத் தோட கெந்தருவ ரம்பு யன்சலித் தோட எண்டிசையை ...... யுண்டமாயோன் அஞ்சி யுன்பதச் சேவை தந்திடென வந்த வெஞ்சினர்க் காடெ ரிந்துவிழ அங்கி யின்குணக் கோலை யுந்திவிடு ...... செங்கைவேலா சிந்து ரம்பணைக் கோடு கொங்கைகுற மங்கை யின்புறத் தோள ணைந்துருக சிந்து ரந்தனைச் சீர்ம ணம்புணர்நல் ...... கந்தவேளே சிந்தி முன்புரக் காடு மங்கநகை கொண்ட செந்தழற் கோல ரண்டர்புகழ் செம்பொ னம்பலத் தாடு மம்பலவர் ...... தம்பிரானே. |
* அடியார்களை ஆட்கொள்ள முருகன் பிணிமுகம் என்ற யானை வாகனத்தில் வருவதாக ஐதீகம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 457 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - காடு, போய், யானை, வெந்து, தந்தனத், தந்த, கொண்ட, தம்பிரானே, தோன்றி, அழிந்து, கந்தவேளே, சிந்தை, வந்து, தந்ததன, யுன்றனது, தகிட, வந்த, சிந்து