பாடல் 455 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தந்த தந்தன தந்த தந்தன தந்த தந்தன தந்த தந்தன தந்த தந்தன தந்த தந்தன ...... தனதான |
கொந்த ளம்புழு கெந்த வண்பனி ரம்ப சம்ப்ரம ணிந்த மந்தர கொங்கை வெண்கரி கொம்பி ணங்கிய ...... மடமாதர் கொந்த ணங்குழ லின்ப மஞ்சள ணிந்து சண்பக வஞ்சி ளங்கொடி கொஞ்சு பைங்கிளி யன்பெ னுங்குயில் ...... மயில்போலே வந்து பஞ்சணை யின்ப முங்கொடு கொங்கை யும்புய முந்த ழும்புற மஞ்சு வொண்கலை யுங்கு லைந்தவ ...... மயல்மேலாய் வஞ்சி னங்கள்தி ரண்டு கண்செவி யுஞ்சு கங்கள்தி ரும்பி முன்செய்த வஞ்சி னங்களு டன்கி டந்துட ...... லழிவேனோ தந்த னந்தன தந்த னந்தன திந்தி மிந்திமி திந்தி மிந்திமி சங்கு வெண்கல கொம்பு துந்துமி ...... பலபேரி சஞ்ச லஞ்சல கொஞ்சு கிண்கிணி தங்கு டுண்டுடு டுண்டு டன்பல சந்தி ரம்பறை பொங்கு வஞ்சகர் ...... களமீதே சிந்த வெண்கழு கொங்கு பொங்கெழு செம்பு ளங்கரு டன்ப ருந்துகள் செங்க ளந்திகை யெங்கு மண்டிட ...... விடும்வேலா திங்க ளிந்திர னும்ப ரந்தர ரும்பு கழ்ந்துரு கும்ப ரன்சபை செம்பொ னம்பல மங்கொ ளன்பர்கள் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 455 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, தந்தன, அழகிய, வஞ்சி, போல், பெருமாளே, போலவும், வாய்ந்த, என்னும், தந்தனந்தன, களத்தில், கொண்ட, போர்க், திந்திமிந்திமி, நிரம்பச், முன்பு, டுண்டுடு, சண்பக, கொஞ்சு, கொங்கை, மந்தர, கொந்த, வந்து, னந்தன, கிண்கிணி, துந்துமி, மிந்திமி, திந்தி, நல்ல