பாடல் 440 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ...:;
தாளம் -
தனதன தந்ததத்த தனதன தந்ததத்த தனதன தந்ததத்த ...... தனதான |
மொழியநி றங்கறுத்து மகரவி னங்கலக்கி முடியவ ளைந்தரற்று ...... கடலாலும் முதிரவி டம்பரப்பி வடவைமு கந்தழற்குள் முழுகியெ ழுந்திருக்கு ...... நிலவாலும் மழையள கந்தரித்த கொடியிடை வஞ்சியுற்ற மயல்தணி யும்படிக்கு ...... நினைவாயே மரகத துங்கவெற்றி விகடந டங்கொள்சித்ர மயிலினில் வந்துமுத்தி ...... தரவேணும் அழகிய மென்குறத்தி புளகித சந்தனத்தி னமுதத னம்படைத்த ...... திருமார்பா அமரர்பு ரந்தனக்கு மழகிய செந்திலுக்கு மருணைவ ளம்பதிக்கு ...... மிறையோனே எழுபுவ னம்பிழைக்க அசுரர்சி ரந்தெறிக்க எழுசயி லந்தொளைத்த ...... சுடர்வேலா இரவிக ளந்தரத்தர் அரியர பங்கயத்த ரிவர்கள்ப யந்தவிர்த்த ...... பெருமாளே. |
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய் கூறுவதுபோல அமைந்தது.கடல், நிலவு முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 440 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அழகிய, தந்ததத்த, தனதன, கொண்டதாகவும், நிறம், நிலவாலும், கடலாலும், பெருமாளே