பாடல் 437 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தான தனத்தத் தனத்த தத்தன தான தனத்தத் தனத்த தத்தன தான தனத்தத் தனத்த தத்தன ...... தனதான |
மானை விடத்தைத் தடத்தி னிற்கயல் மீனை நிரப்பிக் குனித்து விட்டணை வாளி யைவட்டச் சமுத்தி ரத்தினை ...... வடிவேலை வாளை வனத்துற் பலத்தி னைச்செல மீனை விழிக்கொப் பெனப்பி டித்தவர் மாய வலைப்பட் டிலைத்து டக்குழல் ...... மணநாறும் ஊன விடத்தைச் சடக்கெ னக்கொழு வூறு முபத்தக் கருத்த டத்தினை யூது பிணத்தைக் குணத்ர யத்தொடு ...... தடுமாறும் ஊச லைநித்தத் த்வமற்ற செத்தையு பாதி யையொப்பித் துனிப்ப வத்தற வோகை செலுத்திப் ப்ரமிக்கு மிப்ரமை ...... தெளியாதோ சான கிகற்புத் தனைச்சு டத்தன சோக வனத்திற் சிறைப்ப டுத்திய தானை யரக்கற் குலத்த ரத்தனை ...... வருமாளச் சாலை மரத்துப் புறத்தொ ளித்தடல் வாலி யுரத்திற் சரத்தை விட்டொரு தாரை தனைச்சுக் ரிவற்க ளித்தவன் ...... மருகோனே சோனை மிகுத்துத் திரட்பு னத்தினி லானை மதத்துக் கிடக்கு மற்புத சோண கிரிச்சுத் தர்பெற்ற கொற்றவ ...... மணிநீபத் தோள்கொ டுசக்ரப் பொருப்பி னைப்பொடி யாக நெருக்கிச் செருக்க ளத்தெதிர் சூர னைவெட்டித் துணித்த டக்கிய ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 437 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தத், தத்தன, தனத்த, மீனையும், பெருமாளே, மீனை, தெளியாதோ