பாடல் 436 - திருவருணை - திருப்புகழ்

ராகம் -...; தாளம்
-
தானனத் தத்ததனத் தானனத் தத்ததனத் தானனத் தத்ததனத் ...... தத்த தனதான |
போககற் பக்கடவுட் பூருகத் தைப்புயலைப் பாரியைப் பொற்குவையுச் ...... சிப்பொ ழுதிலீயும் போதுடைப் புத்திரரைப் போலவொப் பிட்டுலகத் தோரைமெச் சிப்பிரியப் ...... பட்டு மிடிபோகத் த்யாகமெத் தத்தருதற் காசுநற் சித்திரவித் தாரமுட் பட்டதிருட் ...... டுக்க விகள்பாடித் தேடியிட் டப்படுபொற் பாவையர்க் கிட்டவர்கட் சேல்வலைப் பட்டடிமைப் ...... பட்டு விடலாமோ ஆகமப் பத்தருமற் றாரணச் சுத்தருமுற் றாதரிக் கைக்கருணைத் ...... துப்பு மதில்சூழும் ஆடகச் சித்ரமணிக் கோபுரத் துத்தரதிக் காகவெற் றிக்கலபக் ...... கற்கி யமர்வோனே தோகையைப் பெற்றஇடப் பாகரொற் றைப்பகழித் தூணிமுட் டச்சுவறத் ...... திக்கி லெழுபாரச் சோதிவெற் பெட்டுமுதிர்த் தூளிதப் பட்டமிழச் சூரனைப் பட்டுருவத் ...... தொட்ட பெருமாளே. |
* தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,மதுரம் - இனிமை வாய்ந்தது,சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,வித்தாரம் - வர்ணனை மிக்கது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 436 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மீது, பட்டு, தானனத், தத்ததனத், அழகிய, மிக்கது, கவிதைகள், மயில், பொன், விடலாமோ, பெருமாளே, தெய்வ, கவிகள்