பாடல் 419 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தானதன தத்த தத்த தானதன தத்த தத்த தானதன தத்த தத்த ...... தனதான |
கோடுசெறி மத்த கத்தை வீசுபலை தத்த வொத்தி கூறுசெய்த ழித்து ரித்து ...... நடைமாணார் கோளுலவு முப்பு ரத்தை வாளெரிகொ ளுத்தி விட்ட கோபநுத லத்த ரத்தர் ...... குருநாதா நீடுகன கத்த லத்தை யூடுருவி மற்ற வெற்பு நீறெழமி தித்த நித்த ...... மனதாலே நீபமலர் பத்தி மெத்த வோதுமவர் சித்த மெத்த நீலமயில் தத்த விட்டு ...... வரவேணும் ஆடலணி பொற்சி லைக்கை வேடுவர்பு னக்கு றத்தி ஆரமது மெத்து சித்ர ...... முலைமீதே ஆதரவு பற்றி மெத்த மாமணிநி றைத்த வெற்றி ஆறிருதி ருப்பு யத்தில் ...... அணைவீரா தேடிமையொர் புத்தி மெத்தி நீடுறநி னைத்த பத்தி சீருறவு ளத்தெ ரித்த ...... சிவவேளே தேறருணை யிற்ற ரித்த சேண்முகடி டத்த டர்த்த தேவர்சிறை வெட்டி விட்ட ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 419 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்த, விட்ட, தானதன, மெத்த, உள்ள, அழகிய, பெருமாளே, வெற்றி, பத்தி, ரித்த, வெட்டி