பாடல் 403 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் -
தனதனன தனதனன தான தத்த தந்த தனதனன தனதனன தான தத்த தந்த தனதனன தனதனன தான தத்த தந்த ...... தனதான |
இருளளக மவிழமதி போத முத்த ரும்ப இலகுகயல் புரளஇரு பார பொற்ற னங்கள் இளகஇடை துவளவளை பூச லிட்டி ரங்க ...... எவராலும் எழுதரிய கலைநெகிழ ஆசை மெத்த வுந்தி யினியசுழி மடுவினிடை மூழ்கி நட்பொ டந்த இதழமுது பருகியுயிர் தேக மொத்தி ருந்து ...... முனிவாறி முருகுகமழ் மலரமளி மீதி னிற்பு குந்து முகவனச மலர்குவிய மோக முற்ற ழிந்து மொழிபதற வசமழிய ஆசை யிற்க விழ்ந்து ...... விடுபோதும் முழுதுணர வுடையமுது மாத வத்து யர்ந்த பழுதில்மறை பயிலுவஎ னாத ரித்து நின்று முநிவர்சுரர் தொழுதுருகு பாத பத்ம மென்று ...... மறவேனே ஒருசிறுவன் மணமதுசெய் போதி லெய்த்து வந்து கிழவடிவு கொடுமுடுகி வாச லிற்பு குந்து உலகறிய இவனடிமை யாமெ னக்கொ ணர்ந்து ...... சபையூடே ஒருபழைய சருகுமடி ஆவ ணத்தை யன்று உரமொடவ னதுவலிய வேகி ழிக்க நின்று உதறிமுறை யிடுபழைய வேத வித்தர் தந்த ...... சிறியோனே அரியவுடு பதிகடவி யாட கச்சி லம்பொ டழகுவட மணிமுடிவி யாள மிட்ட ழுந்த அமரரொடு பலர்முடுகி ஆழி யைக்க டைந்து ...... அமுதாக அருளுமரி திருமருக வார ணத்தை யன்று அறிவினுட னொருகொடியி லேத ரித்து கந்த அருணகிரி நகரிலெழு கோபு ரத்த மர்ந்த ...... பெருமாளே. |
* சூரனுடைய உடல் வேலால் பிளவுபட, ஒரு கூறு மயிலாகவும், மற்றொரு கூறு சேவலாகவும் முருக வேளை எதிர்த்து வர, அவர் அருள் கண்ணால், மயில் வாகனமாகவும், சேவல் கொடியாகவும் ஆயின.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 403 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, தந்த, கொண்டு, நின்று, வந்து, தத்த, கூறு, எல்லாம், செய்து, முன், அந்த, சிறுவன், வைத்து, அழகிய, ரித்து, குந்து, ணத்தை, யன்று, நிலையில், பெருமாளே, முழுகி