பாடல் 378 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ஸாரமதி ;
தாளம் - கண்டசாபு
தனதனத் தானனத் தனதனத் தானனத் தனதனத் தானனத் ...... தனதான |
பரியகைப் பாசம்விட் டெறியுமக் காலனுட் பயனுயிர்ப் போயகப் ...... படமோகப் படியிலுற் றாரெனப் பலர்கள்பற் றாவடற் படரெரிக் கூடுவிட் ...... டலைநீரிற் பிரியுமிப் பாதகப் பிறவியுற் றேமிகப் பிணிகளுக் கேயிளைத் ...... துழல்நாயேன் பிழைபொறுத் தாயெனப் பழுதறுத் தாளெனப் பிரியமுற் றோதிடப் ...... பெறுவேனோ கரியமெய்க் கோலமுற் றரியினற் றாமரைக் கமைவபற் றாசையக் ...... கழலோர்முன் கலைவகுத் தோதிவெற் பதுதொளைத் தோனியற் கடவுள்செச் சேவல்கைக் ...... கொடியோனென் றரியநற் பாடலைத் தெரியுமுற் றோற்கிளைக் கருணையிற் கோபுரத் ...... துறைவோனே அடவியிற் றோகைபொற் றடமுலைக் காசையுற் றயருமச் சேவகப் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 378 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கொண்டு, தானனத், தனதனத், என்றும், நல்ல, கொண்ட, வீசும், பெறுவேனோ, பெருமாளே, இந்தப்