பாடல் 377 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - ........
தனதனத் தானனத் தனதனத் தானனத் தனதனத் தானனத் ...... தனதான |
கறுவுமிக் காவியைக் கலகுமக் காலனொத் திலகுகட் சேல்களிப் ...... புடனாடக் கருதிமுற் பாடுகட் டளையுடற் பேசியுட் களவினிற் காசினுக் ...... குறவாலுற் றுறுமலர்ப் பாயலிற் றுயர்விளைத் தூடலுற் றுயர்பொருட் கோதியுட் ...... படுமாதர் ஒறுவினைக் கேயுளத் தறிவுகெட் டேனுயிர்ப் புணையிணைத் தாள்தனைத் ...... தொழுவேனோ மறையெடுத் தோதிவச் சிரமெடுத் தானுமைச் செறிதிருக் கோலமுற் ...... றணைவானும் மறைகள்புக் காரெனக் குவடுநெட் டாழிவற் றிடஅடற் சூரனைப் ...... பொரும்வேலா அறிவுடைத் தாருமற் றுடனுனைப் பாடலுற் றருணையிற் கோபுரத் ...... துறைவோனே அடவியிற் றோகைபொற் றடமுலைக் காசையுற் றயருமச் சேவகப் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 377 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனத், வாய்ந்த, தானனத், கொண்ட, வலிமை, அழகிய, மகிழ்ச்சியுடன், பெருமாளே, செய்யும், போன்று, பொருள்