பாடல் 373 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - ..........
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான |
முருகு செறிகுழல் சொருகிய விரகிகள் முலைக ளளவிடு முகபட பகடிகள் முதலு முயிர்களு மளவிடு களவியர் ...... முழுநீல முழுகு புழுககில் குழைவடி வழகியர் முதிர வளர்கனி யதுகவ ரிதழியர் முனைகொ ளயிலென விழியெறி கடைசிய ...... ரநுராகம் மருவி யமளியி னலமிடு கலவியர் மனது திரவிய மளவள வளவியர் வசன மொருநொடி நிலைமையில் கபடியர் ...... வழியேநான் மருளு மறிவின னடிமுடி யறிகிலன் அருணை நகர்மிசை கருணையொ டருளிய மவுன வசனமு மிருபெரு சரணமு ...... மறவேனே கருதி யிருபது கரமுடி யொருபது கனக மவுலிகொள் புரிசைசெய் பழையது கடிய வியனகர் புகவரு கனபதி ...... கனல்மூழ்கக் கவச அநுமனொ டெழுபது கவிவிழ அணையி லலையெறி யெதிரமர் பொருதிடு களரி தனிலொரு கணைவிடு மடலரி ...... மருகோனே சருவு மவுணர்கள் தளமொடு பெருவலி யகல நிலைபெறு சயிலமு மிடிசெய்து தரும னவர்பதி குடிவிடு பதனிசை ...... மயில்வீரா தருண மணியவை பலபல செருகிய தலையள் துகிலிடை யழகிய குறமகள் தனது தனமது பரிவொடு தழுவிய ...... பெருமாளே. |
* இது அருணகிரியார் திருஅருணையில் முருகனால் ஆட்கொள்ளப்பட்டதைக் குறிக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 373 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, கொண்ட, நான், வலிமை, தங்கள், நன்கு, அணிந்த, தழுவிய, பெருமாளே