பாடல் 372 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - .......
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான |
முகிலை யிகல்பொரு முழுவிருள் குழலென முதிய மதியது முகமென நுதலிணை முரணர் வரிசிலை முடுகிடு கணைவிழி ...... யெனமூவா முளரி தனின்முகு ளிதமலர் முலையென முறுவல் தனையிரு குழைதனை மொழிதனை மொழிய வரியதொர் தெரிவையர் வினையென ...... மொழிகூறிப் பகலு மிரவினு மிகமன மருள்கொடு பதியி லவர்வடி வுளதழ கெனவொரு பழுது மறஅவர் பரிவுற இதமது ...... பகராதே பகைகொ டெதிர்பொரு மசுரர்கள் துகைபட விகட முடனடை பயில்மயில் மிசைவரு பவனி தனையநு தினநினை யெனஅருள் ...... பகர்வாயே புகல வரியது பொருளிது எனவொரு புதுமை யிடஅரி யதுமுத லெனுமொரு பொதுவை யிதுவென தவமுடை முநிவர்கள் ...... புடைசூழப் புரமு மெரியெழ நகையது புரிபவர் புனலும் வளர்மதி புனைசடை யினரவர் புடவி வழிபட புதை பொருள் விரகொடு ...... புகல்வோனே அகில கலைகளு மறநெறி முறைமையு மகில மொழிதரு புலவரு முலகினி லறிஞர் தவமுயல் பவர்களு மியலிசை ...... யதனாலே அறுவர் முலையுணு மறுமுக னிவனென அரிய நடமிடு மடியவ ரடிதொழ அருணை நகர்தனி லழகுடன் மருவிய ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 372 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, என்றும், நடனம், செய்யும், முடியாததான, நிற்க, சுவாமி, வகையில், மாதர்களின், மொழிய, பொருள், பெருமாளே, எனவும், கூறி