பாடல் 364 - திருவானைக்கா - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - .....
தனந்த தத்தன தானான தானன தனந்த தத்தன தானான தானன தனந்த தத்தன தானான தானன ...... தந்ததான |
நிறைந்த துப்பிதழ் தேனூறல் நேரென மறந்த ரித்தக ணாலால நேரென நெடுஞ்சு ருட்குழல் ஜீமூத நேரென ...... நெஞ்சின்மேலே நெருங்கு பொற்றன மாமேரு நேரென மருங்கு நிட்கள ஆகாச நேரென நிதம்ப முக்கணர் பூணார நேரென ...... நைந்துசீவன் குறைந்தி தப்பட வாய்பாடி யாதர வழிந்த ழைத்தணை மேல்வீழு மாலொடு குமண்டை யிட்டுடை சோராவி டாயில ...... மைந்துநாபி குடைந்தி ளைப்புறு மாமாய வாழ்வருள் மடந்தை யர்க்கொரு கோமாள மாகிய குரங்கை யொத்துழல் வேனோம னோலய ...... மென்றுசேர்வேன் மறந்த சுக்ரிப மாநீசன் வாசலி லிருந்து லுத்தநி யோராத தேதுசொல் மனங்க ளித்திட லாமோது ரோகித ...... முன்புவாலி வதஞ்செய் விக்ரம சீராம னானில மறிந்த திச்சர மோகோகெ டாதினி வரும்ப டிக்குரை யாய்பார்ப லாகவ ...... மென்றுபேசி அறந்த ழைத்தநு மானோடு மாகடல் வரம்ப டைத்ததின் மேலேறி ராவண னரண்கு லைத்தெதிர் போராடு நாரணன் ...... மைந்தனான அநங்கன் மைத்துன வேளேக லாபியின் விளங்கு செய்ப்பதி வேலாயு தாவிய னலங்க யப்பதி வாழ்வான தேவர்கள் ...... தம்பிரானே. |
* திருமாலின் மகள் வள்ளி. மகன் மன்மதன். எனவே, வள்ளியின் கணவன் முருகனுக்கு மன்மதன் மைத்துனன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 364 - திருவானைக்கா - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - என்றும், நேரென, பெரிய, ஒக்கும், தனந்த, தத்தன, மறந்த, தானான, தானன, ஒப்பானது, விளங்கும், என்னும், திருமாலின், மன்மதன், தருகின்ற, மீது, வீரம், தேவர்கள், நிறைந்த, தம்பிரானே, கொண்ட, மேல், அந்த