பாடல் 365 - திருவானைக்கா - திருப்புகழ்

ராகம் - தேஷ்;
தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகதிமி-2, தகதிமி-2, தகிடதகதிமி-3 1/2
- எடுப்பு -1/2 இடம்
தகதிமி-2, தகதிமி-2, தகிடதகதிமி-3 1/2
- எடுப்பு -1/2 இடம்
தனதன தனதன தாந்த தானன தனதன தனதன தாந்த தானன தனதன தனதன தாந்த தானன ...... தனதான |
பரிமள மிகவுள சாந்து மாமத முருகவிழ் வகைமலர் சேர்ந்து கூடிய பலவரி யளிதுயில் கூர்ந்து வானுறு ...... முகில்போலே பரவிய இருள்செறி கூந்தல் மாதர்கள் பரிபுர மலரடி வேண்டி யேவிய பணிவிடை களிலிறு மாந்த கூளனை ...... நெறிபேணா விரகனை யசடனை வீம்பு பேசிய விழலனை யுறுகலை யாய்ந்தி டாமுழு வெகுளியை யறிவது போங்க பாடனை ...... மலமாறா வினையனை யுரைமொழி சோர்ந்த பாவியை விளிவுறு நரகிடை வீழ்ந்த மோடனை வினவிமு னருள்செய்து பாங்கி னாள்வது ...... மொருநாளே கருதலர் திரிபுர மாண்டு நீறெழ மலைசிலை யொருகையில் வாங்கு நாரணி கழலணி மலைமகள் காஞ்சி மாநக ...... ருறைபேதை களிமயில் சிவனுடன் வாழ்ந்த மோகினி கடலுடை யுலகினை யீன்ற தாயுமை கரிவன முறையகி லாண்ட நாயகி ...... யருள்பாலா முரணிய சமரினில் மூண்ட ராவண னிடியென அலறிமு னேங்கி வாய்விட முடிபல திருகிய நீண்ட மாயவன் ...... மருகோனே முதலொரு குறமகள் நேர்ந்த நூலிடை யிருதன கிரிமிசை தோய்ந்த காமுக முதுபழ மறைமொழி யாய்ந்த தேவர்கள் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 365 - திருவானைக்கா - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தாந்த, தானன, மூடனை, மகள், தேவி, மீதும், பெருமாளே, காஞ்சி, சாந்து, பாவியை, தகதிமி, நாயகி, தோய்ந்த